Sunday, 12 January 2014
நந்திக்கடலோரத்தின் குரல் !
தமிழரசன் அப்துல் காதர்
ஓயாமல் துரத்தும் குரல் அது !
கடந்து போன நாட்களில் கேட்டும்மிராத குரல் அது !
உயிரை நெருக்கி உடலை வதைக்கும் -
ஓங்காரமாக வளர்ந்து
ஒடுங்கிப் போகும்
ஈனக்குரல் !
எரிந்து போன பிணத்தின்
வாடையுடன் - அடிக்கடி ஒலிக்கும் அது !
பகலோ இரவோ '
அயர்ந்து சிறிது கண்மூடும்
சமயங்களில் ;
அரண்டு போய் விழிதிறக்கச் செய்யும் '
அந்தக் குரல் !
எப்போதும் இதுவரை
கேட்டிராததால் அதுபோல் ;
இதயம் தளர்ந்து
இறக்கின்றேன்
அடிக்கடி,.
என்ன சொல்ல வருகிறது ? - என
யூகிக்க முடியாமல்
எனை வருத்தும்
அழுகைக் குரல் '
அது நந்திக் கடலோரத்திலிருந்து வரும் அவலக்குரல் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment