Wednesday, 15 January 2014

கடலிலே காவியமான காவியநாயகர்கள்

டலிலே காவியமான காவியநாயகர்கள ——————————————————————

அன்றும் ஒரு இதேநாள் !
வஞ்சக இந்திய வலையிலே, வங்கக்கடல் நடுவிலே!
மானம் காக்க உயிர்துறந்தார்; 
பார் புகழும் கிட்டண்ணை !

கேணல் குட்டிசிறியுடனும்-இனம் காக்க வந்த எண்மவரும்; வானம் பார்த்த நடுக்கடலில் வீரச்சாவை எய்திநின்றார் !

சிங்களனுக்கு மாமாவாம்…
சிறு நரி புத்தி இந்தியா ! திடுமென அண்ணையை சுற்றியே
திருட்டுத் தனமாய் தாக்கியதே !

வானுலங்கு ஊர்திகளும்… வளமான ஆயுதப் படைகளும்… கொண்டு எம்மைதாக்கிடவே கொண்ட கொள்கை வீரத்துடன் துமிக்கு பிடித்து எதிர்த்து நின்றார் !

சரணடையக் கூறி சவால் விட்டது,
சாக்கடை மேயும் இந்தியநாய் ! எம்முயிர் இழப்போம் !
மானம் இழப்போமா ?
எதிர்த்து நின்றது ஈழத்துப் புலி ”

தாக்குப்பிடித்தனர்…
பதினைந்தாம் நாள்முழுதும், துமிக்கு பிடித்த கைகளுடன் ! விடிந்ததும் பொழுது ஜனவரி பதினாறு ;
தமிழீழவிடியலின் விளக்காக ‘ எரிந்தார் கிட்டண்ணை தோழர்களுடன் வீரச்சாவெய்தி !

அடங்கமாட்டோம் ! ஓடுங்கமாட்டோம் !
ஆக்கிரமிப்பு இந்தியசிங்களமே! அடிமைத் தளையுடைத்து ஆர்த்தெழுவோம் ! மீண்டும் யாம் ; அப்பொழுது ?
முன்களத்தில் நின்றடிக்கும் கேணல் கிட்டு பீரங்கி படையணி !

மீண்டு எழுவோம் !
மீண்டும் வருவோம் !

-தமிழரசன் (அப்துல் காதர்).




http://thisaikaddi.com/?p=36542

http://www.pulampeyartamizarkal.net/kittu-anna/

http://www.velichaveedu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/

நன்றி என் அண்ணன்
வல்வை அகலினியன் அவர்களுக்கு

No comments:

Post a Comment