Saturday, 18 January 2014
நிரபராதி தமிழர்களை விடுதலைச்செய் !
நீதி நியாயம் புண்ணாக்கு
கடையில் விற்றால் சொல்லுங்கள் !
காசு கொடுத்தும் வாங்கமாட்டேன்
கடனாய் கொடுத்தால்
சொல்லுங்கள் !
ஆண்டுகள் இருபத்திமூன்று
ஆகிவிட்டது இன்று ;
அநீதி இழைக்கப்பட்ட
தமிழர்களின்
கோவணமானது ?
நீதி தேவதையின்
வெள்ளைப்புடவை !
பேரறிவு முருகன் சாந்தனும் ,,
இராபர்ட் பயஸ் உடன் நால்வரும்
தீராத இந்தியவஞ்சகத்தால்
தீயாக எரிகின்றார் சிறைகளிலே '
பாராத முகத்துடன்
பாவித்தமிழர்கள் நாம்
ஏறி முகம் பார்க்காமல்
இருப்பதுவும் இனி எத்துணை நாள் ?
கூடிவரும் காலம் குறைவாக உள்ளதனால்
நீதி வேண்டி நாமும் நன்றாய்
கூடியொழுகுவோம் ஒன்றாய்!
தூங்கியதும் போதும் அதனால் துன்பக்கடல் மீது நிதமும் நீந்தியதும் போதும்
தூங்காமல் சிறைகளுக்குள் இருக்கின்றார் எம்தமிழர்
விடிவை நோக்கி !
அய்யா பொழிலனும் அவருடன் தோழர்களும்
நன்றாக முடிவெடுத்து நடத்துகின்றார் பேரணியொன்று !
இரண்டாம் மாதத்தின் ஐந்தாம் திகதியில்
தாய்த்தமிழ் தலைநகராம் சென்னைப்பட்டணத்தில் காலம் மூன்றுமணி மாலை நேரத்தில்.
புலியென படையாக புறப்பட்டு வாரீர்
எம் உயிர் அண்ணன்களில்
உயிர் காக்க வாரீர்.
தமிழரின் விடுதலையே
தமிழின விடுதலை
அதை மீட்டியெடுத்திடவே
மனம் விரும்பி வாரீர் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment