இவர்கள் ஒரு அதிசயப்பிறவிகள்
வாழ்வதற்காகவே
ஒவ்வொரு மனிதனும்
ஓடிக்கொண்டிருக்கையில்
தமிழின விடுதலைக்காக
சாவதற்கென்று
ஒவ்வொரு மணித்துளியும்
ஓடிக்கொண்டிருந்தவர்கள் !
வானிலும் கடலிலும் தரையிலும் ;
தலைவனுக்கு கட்டுப்பட்டு
சாகசங்கள் பல செய்து
சமாதனமாக உறங்குகிறார்கள் ,
உலகம் அழியும் வரை
ஒழியாது உங்கள் புகழ் !
எங்கள் உடல்கள் அழியும் வரை மறையாது உங்கள் நினைவு !
தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் !
தலைவரின் தாகம்
தமிழீழத் தாயகம் !
புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம் !
No comments:
Post a Comment