• #தமிழீழம் அமைவதை இந்தியா ஏன் விரும்புவதில்லை? - ஆய்வு கட்டுரை
தமிழீழம் என்ற இறையாண்மை அரசு உருவாக இந்தியா ஏன் விரும்புவதில்லை? என்ற கேள்வியோடு எனது முன்னைய பதிவை முடித்திருந்தேன்.
அந்த கேள்விக்கான பதிலை ஆய்வு பார்வையில் சொல்ல முனைவதே இந்த பதிவு.
• #தமிழீழம் என்ற இறையாண்மை அரசு உருவாவதை அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கை முடிவு இந்திய கொள்கை வகுப்பாளர்களால் எடுக்கப்பட்டது. அதை இந்திய அரசு செயல்படுத்துகிறது.
ஏன் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த கொள்கை முடிவிற்கு வந்தார்கள் என்பதை இந்த பதிவின் பிற்பகுதியில் விளக்குகிறேன்.
அதற்கு முன்பு இதில் சம்பந்தப்பட்டுள்ள இலங்கையினது வரலாறு பற்றிய ஆழமான புரிதல் இருக்கவேண்டியது கட்டாயமானது.
• #இலங்கையின் வரலாறு
ஒரு இறையாண்மை அரசின் வெளியுறவு கொள்கை (Foreign Policy) என்பது முழுக்க முழுக்க அதனது இருப்பை உறுதிப்படுத்துவதையே ( Survival) அதனது மிக முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கும். மற்றையவை எல்லாம் அதன் பின்னேதான்.
•#இலங்கை மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்புகள்
இலங்கையின் சுமார் 3000 வருட வரலாற்றை எடுத்துகொண்டால் ஒரு விடயத்தை தெளிவாக காணமுடியும்.
ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க காலத்தை தவிர்த்து பார்த்தால், அதனது வரலாறு நெடுக சிங்கள மன்னர்களது இராச்சியங்களின் மீது படையெடுப்பை நிகழ்த்தியது ஒரே ஒரு தேசம்தான். அந்த தேசம் தமிழ்நாடுதான். குறிப்பாக தமிழ்நாட்டின் சோழ சாம்ராஜ்யமும், பாண்டியர்களும்தான்.
சோழர்களினதும், பாண்டியர்களினதும் இலங்கை மீதான படையெடுப்புகள் சிங்கள மக்களினது வரலாற்றில் அழுத்தமான தடங்களை விட்டுசென்றிருக்கிறது.
சில வரலாற்று நிகழ்வுகளை தருகிறேன்.
“காலத்துக்குக் காலம் தென்னிந்திய படையெடுப்புகள் இலங்கையின் மீது நிகழ்ந்தன.
அதனால் தென் இலங்கையில் படை வீரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தங்கி வாழும் சூழல் ஏற்பட்டது.
கி.மு 177 இல் சேனன்,குத்திகன் என்ற இரு தமிழ்க் குதிரை வியாபாரிகள் தமிழ்ச்சேனையுடன் வந்து இலங்கையை கைப்பற்றி 20 ஆண்டுகள் ஆண்டனர்.
கி.மு 145 இல் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை கைப்பற்றி 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான்.
கி.மு 43 தொட்டு கி.மு 29 வரை ஐந்து தமிழ் மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆண்டுள்ளனர்.
ஶ்ரீமாறஶ்ரீவல்லபன் கி்.பி 815 அளவில் இலங்கை மீது படையெடுத்துள்ளான்.
சுந்தர சோழன் எனும் பராந்தகன், ராஜராஜசோழன்
ஆகியோரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்துள்ளது.
கி.பி 1215 இல் கலிங்கத்து மாகன் என்பதன் 22 ஆண்டுகள் இலங்கையை தன்னாட்சியின் கீழ் வைத்திருந்தான்.”
(கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா எழுதிய இலங்கை சுருக்க வரலாறு எனும் நூலிலிருந்து, பக்கம் 20)
•#இந்த தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளை பற்றி இலங்கையின் வரலாற்று இலக்கியங்கள் என்ன கூறுகின்றன?
“சோழப்படை இலங்கையில் இறங்கி, எதிர்ப்பட்ட கிராமங்களை அடக்கி, உருகுணை நோக்கி நகர்ந்தது.
அங்கு கரைந்துறைந்த மகிந்தனையும், மகராணியை அவளது அனைத்து தங்க ஆபரணங்களுடனும், மகுடம், விலை மதிப்பில்லா வைரங்கள், அரச வாள், பதக்கங்கள் என்பவற்றையும் கவர்ந்து கொண்டனர்.
நாட்டிற்குள் மறைந்திருந்த மன்னனையும் சமாதான உடன்படிக்கை செய்வதாக ஏமாற்றி சிறைப்படுத்தி கொண்டனர். சிறைப்பட்ட அரசனையும் கவர்ந்த திரவியங்களையும் சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்” என்கிறது சூளவம்சம்”.
(கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா எழுதிய இலங்கை சுருக்க வரலாறு எனும் நூலிலிருந்து, பக்கம் 149)
•#இலங்கையின் வரலாற்று இலக்கியங்கள் என்பது யாவை?
“இலங்கை வரலாற்றின் பனுவல்களாக #தீபவம்சம், #மகாவம்சம், #சூளவம்சம் என்பன விளங்குகின்றன.
பாளி மொழியில் இலங்கை தீவின் அரச வம்சாவழியை முதன் முதல் விபரிக்கின்ற நூலாக தீபவம்சம் விளங்குகின்றது.
இதனைப்பின்பற்றி கிபி 6 ஆம் நூற்றாண்டில் மகாநாமதேரர் பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதினார். இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஆவணமாக இப்பனுவல் கொள்ளப்படுகின்றது. விஜயனின் வருகையிலிருந்து மகாசேன மன்னனின் காலம் வரை (கிபி 303) மகாவம்சம் விபரிக்கின்றது.
37 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல் காவிய மரபினை தழுவியதாகவுள்ளது. அதனால் துட்டகாமினி மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டுள்ளது. இவ்விரு நூல்களும் பௌத்த மதத்தையும் அதன் பெருமைகளையும் எடுத்தியம்புவனவாக அமைந்துள்ளன.
முக்கியமாக மகாவம்சம் இலங்கை தேரவாத பௌத்தமதம் மட்டும் சிறப்புற்றிருக்கும் ஒரு நாடு என்கின்றது.
மகாவம்சத்தின் தொடர்ச்சியாக சூளவம்சம் எழுதப்பட்டுள்ளது. இதனை தர்மகீர்த்தி தேரர் என்பவர் தொகுத்தார். இந்நூலும் பௌத்தமதத்தின் மேன்மையையும் பௌத்த மத மன்னர்களின் பெருமைகளையும் சிறப்பாக கூறுகிறது. சூளவம்சத்தின் பாட்டுடைத் தலைவனாக மகா பராக்கிரம்பாகு அமைந்தான்.
இவற்றோடு பௌத்த சாசன வரலாற்றினை விபரிக்கும் நிகாயசங்கிரஹ, ராஜாவளி , பூஜாவளி முதலியனவும் இலங்கை வரலாற்றினை தொட்டு சென்றுள்ளன்.”
(கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா எழுதிய இலங்கை சுருக்க வரலாறு எனும் நூலிலிருந்து, பக்கம் 3)
மேலே விவரித்தவை சிங்கள மக்களின் மிக முக்கியமான வரலாற்று இலக்கியங்கள் தமிழ்நாட்டின் படையெடுப்புகள் பற்றி எத்தகைய சித்திரத்தை சிங்கள மக்களிடம் வரைந்திருக்கிறது என்பதை உங்களுக்கு காட்டும்.
தலைவர் பிரபாகரன் தனது பல மாவீரர் தின உரைகளில் ‘இலங்கை அரசின் மகாவம்ச மனநிலை’ என்ற சொல்லாடலை பயன்படுத்தியிருப்பார்.
இன்றும் ‘மகாவம்ச மனநிலை’ என்ற வார்த்தை பிரயோகத்தை பல கட்டுரைகளில் காணமுடியும்.
•#சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அணுகுமுறை
பின்னாட்களில் 1948 இல், இலங்கை சுதந்திரம் பெற்றபொழுது, சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டின் மீதான அச்சவுணர்வு என்பது இந்தியா மீதாக மாறியது.
அன்றைய காலங்களில் ஆரியர்கள் வேறு தென்னிந்தியர்கள் வேறு என்ற பார்வையோ, இந்தியா என்பது பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட தமக்கிடேயே பல முரண்களை கொண்ட பல தேசிய இனங்களின் கூட்டுதொகுப்பு என்ற பார்வையோ இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை.
இலங்கையில் சிங்கள மக்களினது வரலாற்றில் சோழர்களும்,பாண்டியர்களும் விட்டு சென்ற ஆழமான தடங்களை இந்தியாவின் தடங்களாக கருதியது.
இதை மனதில் வைத்தே இலங்கை தனக்கான வெளியுறவு கொள்கை திட்டத்தை வகுத்தது.
இந்தியா எனும் பெரும் நிலப்பரப்பின் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியத்தில் இருப்பதால், இந்தியாவை தனது இருப்புக்கான (survival ) அச்சுறுத்தலாக கருதியே இலங்கை அதனது முழு வெளியுறவு கொள்கையையும் வடிவமைத்தது.
•#இதை பல வரலாற்று நிகழ்வுகளினூடாக புரிந்து கொள்ளலாம்.
இதற்கான உதாரணம் ஒன்றை போரியல் அறிஞரான தராகி சிவராம் கட்டுரையொன்றிலிருந்து தருகிறேன்.
“Why did the Soviet Union consistently veto Ceylon's application for membership in the United Nations as a sovereign state until 1955?
Every time Colombo made an application for membership, the Soviet Union wanted to know 'how sovereign was Ceylon'.
Why? Independent Ceylon had handed over its sovereign right over all its "naval and air bases and ports and military establishments and the use of telecommunications facilities" to the United Kingdom in terms of a defence treaty that D. S Senanayake had signed with Britain at independence.
It should be noted here that the treaty was first proposed by D. S Senanayake in his discussions with the Colonial Office in London in 1945. The treaty gave Britain a say over Sri Lanka's external affairs too. “
( ‘Is Sri Lanka Truly Sovereign? ‘ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து - தராகி சிவராம் 04/02/2004)
தராகி சிவராமின் இந்த பந்தியை மொழிபெயர்த்தால் பின்வருமாறு வரும்.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர இலங்கை முயற்சி செய்தபோது , அந்த முயற்சியை 1955 ஆம் ஆண்டுவரை சோவியத் யூனியன் அதனது ‘வீட்டோ’ வினுடாக நிராகரித்து வந்தது.
ஒவ்வொரு முறையும் இலங்கை முயலும்போது, சோவியத் யூனியன் ‘இலங்கை ஒரு இறையாண்மை அரசு அல்ல’ என்று தனது வாதத்தை முன்வைத்தது.
காரணம் இலங்கை பிரிட்டனோடு செய்து கொண்டிருந்த பாதுகாப்பு ஒப்பந்தமே (defence treaty). அந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் கடற்படை,விமானப்படை தளங்கள்,துறைமுகங்கள் மற்றும் தொலைதொடர்பு என்பவற்றை பிரிட்டன் தனக்கு தேவையானபோது உபயோகிக்கும் அனுமதியை வழங்கியிருந்தது. இது ‘இறையாண்மை அரசு’ என்பதை கேள்விக்கு உள்ளாக்குவதாக சோவியத் யூனியன் தெரிவித்தது.
#இதில் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான அம்சமே,இந்த பிரிட்டனுடனான இந்த Defense Treaty ஐ செய்யவேண்டும் என முன்மொழிந்ததே அன்றைய ஆட்சியாளரான D.S. சேனாநாயக்க தான்.
இந்த திட்டத்தை 1945 ஆம் ஆண்டிலேயே ( சுதந்திரத்திற்கு முன்பு) அவர் பிரிட்டனுக்கு முன்மொழிந்திருக்கிறார்.
#பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறப்போகும் இலங்கை , அதே பிரிட்டனிடம் தமது இராணுவ தளங்களை உபயோகிக்கும் அனுமதியை தானாக ஏன் முன்வந்து வழங்கவேண்டும்?
காரணம் இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதியதே.
1970 களிற்கு முன்பான இலங்கையின் இராணுவம் என்பது இந்தியாவின் இராணுவ படையெடுப்பை எதிர்கொள்ளும் விதமாகவே வடிவமைக்கப்பட்டது.
•#இதனை தராகி சிவராம் அவர்களின் வரிகளிலேயே தருகிறேன்.
“இந்தியாவினாலேயே சுதந்திர சிறிலங்காவிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படுமென முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கா அப்போது திடமாக நம்பினார். இப்படிப் பயப்படத் தேவையில்லை என இந்தியப் பிரதமர் நேரு கூறியதைக்கூட அவர் நம்பத் தயாராக இருக்கவில்லை.
இந்தியா இலங்கைமீது படையெடுத்து அதைத் தன்னுடைய இன்னொரு மாகாணமாக இணைத்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. இதன் காரணமாகவே அவர் பிரித்தானியாவுடன் கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டார். இதன்படி வெளிநாட்டுப் படையச்சுறுத்தல் சிறிலங்காவிற்கு ஏற்படும் பட்சத்தில் பிரித்தானியப் படைகள் அதன் உதவிக்கு வருமென உடன்பாடானது.
எனவே வெளிநாட்டுப் படையெடுப்பொன்றை எதிர்கொள்வது என்பதே புதிதாக உருவாக்கப்பட்ட சிறிலங்காப் படைகளின் செயல் நோக்கமாக வரையறுக்கப்பட்டது.
அதாவது பிரித்தானியப் படையுதவி வந்து சேரும் வரை இந்தியப்படையெடுப்பொன்றை வரையறுக்கப்பட்ட வழிகளிலேனும் எதிர்கொள்வதெப்படி என்பதனடிப்படையில் சிறிலங்கா படையின் திட்டமிடல் அப்போது அமைந்திருந்தது.”
(“முப்படைகளுக்கும் மரபு வழி போர்த்தகைமை உண்டா?” எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து- தராகி சிவராம் 27/03/2005)
•#இலங்கையின் மலையக பகுதிகளில் வாழ்ந்து வந்த இந்திய தமிழர்களின் குடியுரிமையை பறித்த நிகழ்வில் கூட, ‘இந்தியாவின் அச்சுறுத்தல்’ என்ற இலங்கை ஆட்சியாளர்களின் இந்த பார்வை பெரும் பங்கு வகித்தது எனலாம்.
“However, perceived socio-cultural links of the Estate Tamils to India gave rise to national security fears on the part of the Sri Lankan government.
Prime Minister Kotelawala described the Indian Tamil problem as a matter of “life and death for the Sinhalese.”
An apprehension of being swallowed up by the bigger and powerful India across the Palk Straits also underwrote the Sinhala Administration’s decision to disenfranchise the Estate Tamils.
With the central administration of India pursuing its own monolithic nationalist ideology and curtailing minority rights, the Sinhalese feared that future Indian leaders might use the Indian Tamils as a fifth column in the island if estate workers were granted citizenship.”
(“Citizenship and statelessness in South Asia” எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து - Gerrard Khan)
மேலே தந்திருக்கும் வரலாற்று நிகழ்வுகள், சுதந்திரத்திற்கு பின்னரான காலங்களில் இலங்கை அதனது இருப்புக்கான அச்சுறுத்தலாக இந்தியாவை கருதியது என்பதை தெளிவாக காட்டுகின்றன.
•#பிற்காலங்களிலாவது இலங்கையின் இந்தியா மீதான ஐயம் மாறியதா?
இல்லை என்பதே பதில்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான உலக ஒழுங்கு அமெரிக்கா, சோவியத் யூனியன் என இரண்டாக பிரிந்தது (Bipolar World).
70,80 களில் இந்தியா சோவியத் யூனியனுடனான உறவை வலுப்படுத்திய அதேநேரத்தில் இலங்கை அமெரிக்காவுடனான அதனது உறவை வலுப்படுத்தியது.
அதன் ஒரு பகுதிதான் இலங்கையில் அமெரிக்காவின் Voice Of America எனும் சேவையினை அமைக்க அனுமதி தந்தது என்பவையெல்லாம்.
இதுவும் ‘இந்தியாவின் அச்சுறுத்தலை’ neutralize செய்வதற்காக இலங்கை கையாண்ட வழிமுறையே.
•1990 இற்கு #பின்னரான காலகட்டங்களில் இலங்கையின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருந்தவர்கள் விடுதலை புலிகள்.உலக ஒழுங்கின் உதவியின்றி விடுதலை புலிகளை வீழ்த்தமுடியாது என்ற போரியல் ஆற்றலை விடுதலை புலிகள் அடைந்தார்கள்.
விடுதலை புலிகளை வீழ்த்துவதற்கு இந்தியாவின் ராஜதந்திர/இராணுவ உதவிகள் கட்டாயம் தேவை என்ற நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.
உலக ஒழுங்கை தமக்கு சாதகமான போக்கை கடைபிடிக்க வைப்பதற்கு இந்திய பிராந்திய வல்லரசின் பெரும் உதவி இலங்கைக்கு தேவைப்பட்டது.
அதற்கேற்ப இலங்கை அதனது வெளியுறவு கொள்கையை நெகிழ்த்தி இந்தியாவை உள்வாங்கியது.
2009 இல் விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது.
அதன் பின்னர் இலங்கை மீண்டும் இந்தியாவின் செல்வாக்கிலிருந்து விடுபடும் வகையில் சீனாவை உள்ளிழுத்தது. மீண்டும் இந்தியாவை neutralize செய்வதற்கான அணுகுமுறையே இலங்கையின் சீனாவுடனான உறுதியான நெருக்கம்.
•#இந்த புள்ளியில் ஒரு கேள்வி எழும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதியதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இருந்தன.ஆனால் இன்றைய உலக ஒழுங்கிலும் இலங்கை இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதவேண்டுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது.
#ஆனால் இன்றைய உலக ஒழுங்கிலும் இலங்கை, இந்தியாவை தனக்கான எதிர்நிலையில் வைத்தே அதனது வெளியுறவு கொள்கையை வடிவமைக்கிறது என்பதே யதார்த்தம்.
காரணம் நான் முன்பே கூறியதுபோல வெளியுறவு கொள்கையின் முதல் முன்னுரிமை ‘இருத்தலை’ ( survival) அல்லது தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே.
#இன்னும் எதிர்காலத்தில் தனக்கு அச்சுறுத்தலை தரக்கூடிய சாத்தியம் உள்ள நாடாக ‘இந்தியாவை மட்டுமே’ இலங்கை கருதமுடியும்.
•#அதற்கான காரணங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.
1. #இலங்கையின் நிலப்பரப்பை இரு தேசிய இனங்கள் தமது வரலாற்று தாயக நிலமாக கொண்டிருக்கின்றன. ஒன்று தமிழர்கள் மற்றையது சிங்களவர்கள்.
இந்த பூர்வீக தமிழர்கள் தமிழ்நாட்டுடன் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வலுவான தொடர்பை தொடர்ந்து பேணி வந்தவர்கள்.
இலங்கையில் சிங்கள மக்களின் இறையாண்மை மீதான ஏகபோக உரிமையை தமிழர்கள் இன்றுவரை கேள்விக்குட்படுத்தி வருகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் நடத்தும் எந்தவொரு போராட்டமும் தமிழகத்தில் கணிசமான உணர்வலைகளை உருவாக்குவதும் தவிர்க்கமுடியாதது.
#ஆக இரண்டு தரப்பு தமிழர்களுக்குமான இந்த உணர்வுபூர்வமான பிணைப்பை இலங்கை ஒருவித எச்சரிக்கையுடனேயே அணுகுகிறது.
இலங்கையில் தனது சிங்கள பௌத்த மேலாண்மையை கேள்விக்கு உட்படுத்தும் பூர்வீக தமிழர்களின் உறவுகள் கடலுக்கு அப்பால் வெறும் 40கிமீ தொலைவில் 8 கோடி மக்களுடன் இருப்பதை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் ஒருவித அச்சுறுத்தலுடனேயே அணுகுகிறார்கள்.
காரணம் எதிர்காலங்களில் இந்தியா எவ்வளவு தூரம் அதனது பூர்வீக தேசிய இனங்களின் எழுச்சியை கட்டுப்படுத்தி வெற்றி காணப்போகிறது என்பதிலேயே இது பெரும்பாலும் தங்கியிருக்கின்றது.
#ஒருவேளை இந்தியாவில் உள்ள பூர்வீக தேசிய இனங்கள் இந்திய ஒன்றியத்தை விட பலமான அதிகார மையங்களாக மாறினால் அது இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறும்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அடிபணிய நேரிடலாம்.
(ஆனால் இன்னும் நூறு ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு தனது assimilation திட்டங்களின் மூலம் சகல பூர்வீக தேசிய இனங்களினது அடையாளங்களையும் நீர்த்துபோக வைத்துவிடும் என்றே நான் கணிப்பிடுகிறேன். இது எனது தனிப்பட்ட அனுமானம். இந்த assimilation எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான விரிவான பதிவொன்றை எழுதியிருக்கிறேன்)
அவ்வாறு இந்திய ஒன்றிய அரசு வெற்றிகரமாக பூர்வீக தேசிய இனங்களை நீர்த்து போகவைத்தாலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது.
ஏதோ ஒரு காலத்தில் இலங்கை தனது செல்வாக்கை விட்டு மீறி போகும் பட்சத்தில், இலங்கையில் வாழும் பூர்வீக தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவு என்பதால் இந்தியாவிற்கு அவர்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள தார்மீக உரிமை உள்ளது என்று காரணத்தை கற்பித்து மூக்கை நுழைத்து கொண்டே இருக்கும்.
உண்மையிலேயே இந்த காரணத்தை முன்வைத்துதான் 1980 களில் இந்தியா இலங்கையில் நுழைந்தது. இலங்கை சீன உறவு பலமடையும்போதும் இந்தியா இதே காரணத்தை முன்வைத்துதான் உள்நுழையும்.
ஆக இந்த இருவேறு பரிமாணங்களிலும் இந்தியா என்பது இலங்கைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதாகவே இதை இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் அணுகுகிறார்கள்.
2. #சிங்கள மக்களின் உளவியல்.
தமிழர்களின் சோழர்கள்,பாண்டியர்களின் அரசுகள் இலங்கையில் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்தின என்பதை காலங்காலமாக சிங்களவர்களின் வரலாறு, அவர்களின் இதிகாசங்கள் தெளிவாக பதிவு செய்து வைத்திருக்கின்றன.
இது சிங்களவர்களின் மனத்தில் இந்திய எதிர்ப்பு மனப்பான்மை, சந்தேகம் என்பவற்றை இயல்பாகவே விதைத்து வைத்திருக்கிறது. இந்த வரலாற்று தாக்கம் கொண்ட உளவியலில் இருந்து சிங்களவர்கள் வெளியே வரமுடியாது.
3. #மேலே சொன்ன இரண்டு வகை காரணங்களையும் நியாயபடுத்தும் வகையில் இருக்கும் புவியியல்ரீதியான இந்திய நிலப்பரப்பின் அருகாமை.
ஆக இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் வரலாற்றுரீதியாக எந்தவொரு நாடும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை இந்திய நிலப்பரப்பை தவிர.
அதனால் இலங்கை எப்பொழுதுமே இந்தியாவை தனக்கு எதிர்நிலையில் நிறுத்திதான் அதனது வெளியுறவு கொள்கையை வடிவமைக்கும். இது தவிர்க்கமுடியாதது. இதுதான் தொலைநோக்கு பார்வையில் சரியான அணுகுமுறையும் கூட.
இனி இந்த சதுரங்க ஆட்டத்தின் அடுத்த முக்கிய ஆட்டக்காரரான இந்தியா.
• #இந்தியா
இலங்கை அதனது வெளியுறவு கொள்கையை திட்டமிடும்போது இந்தியாவை எதிர்நிலையில் வைத்துத்தான் வடிவமைக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியமல்ல.
இது இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரிந்ததுதான்.
•#இப்பொழுது நீங்கள் உங்களை இந்தியாவின் கொள்கை வகுப்பாளராக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையை வடிவமைக்கும்போதும், உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே வடிவமைப்பீர்கள். உங்களின் நலன்களை காப்பதற்கான அணுகுமுறைகளைதான் அவை கொண்டிருக்கும்.
இதைத்தான் சகல இறையாண்மை அரசுகளும் செய்கின்றன.
there are no permanent friends or enemies but permanent interests in international relations என்பதுதான் நாடுகளின் வெளியுறவு கொள்கையின் உள்ளார்ந்த தன்மை.
இந்த யதார்த்தத்தின்படி அணுகினால், இலங்கையில் நடந்த விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டத்தை எடுத்துகொண்டாலும், இந்தியா அதை ஆதரிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
இந்த ஆயுதபோராட்டத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தமிழர்கள் ஆதரித்தாலும், இந்திய ஒன்றிய அரசு அதனது நலனை ( National Interest) மட்டுமே கருத்தில் கொண்டுதான் செயல்படமுடியும்.
•#ஆனால் இங்கு மிக முக்கிய கேள்வி எழுகிறது.
இந்திய நலன்களை குறிக்கோளாக வைத்து வடிவமைக்கப்பட்ட இந்திய வெளியுறவு கொள்கையின் பார்வையில் இலங்கையுடன் அது நட்பாக அணுகவேண்டுமா அல்லது இலங்கையை எதிர்திலையில் வைத்து அணுகவேண்டுமா என்பதுதான் அந்த கேள்வி.
•#மேலே கூறியபடி நீங்கள் இந்தியாவின் கொள்கை வகுப்பாளராக இருந்தால் இலங்கையை எவ்வாறு அணுகுவீர்கள்?
இலங்கை எனும் நாடு அதனது வரலாற்று பார்வையில் இந்தியாவை சந்தேகத்துடனேயே அணுகுகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரிகிறது.
நீங்கள் என்னதான் நல்லெண்ண முயற்சிகளை எடுத்தாலும், இந்திய நாட்டின் செல்வாக்கை neutralize செய்வதற்கான அணுகுமுறையையே கையாளுகிறது என்பதை சுதந்திரத்திற்கு பின்னரான அதனது ராஜதந்திர நகர்வுகள் தெளிவாக காட்டுகின்றன.
அதேநேரம் மறுமுனையில் இலங்கையின் நிலப்பரப்பில் தமக்கென ஒரு தேசம் அமைக்க தமிழர்கள் ஆயுதப்போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் தமிழர்களுக்கென ஒரு இறையாண்மை அரசை நிறுவ முயற்சிக்கிறார்கள்.
#எந்த வரலாற்று காரணம் சிங்கள மக்களுக்கு, இந்தியாவை எதிர்நிலையில் வைத்து சந்தேகத்துடன் பார்க்கும் உளவியலை தந்ததோ அதேபோல் இன்னொரு வரலாற்று காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவை நட்புடன் பார்க்கும் உளவியலை தந்திருக்கிறது.
அந்த வரலாற்று காரணம்தான் சங்ககாலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் இருக்கும் மொழி,இன,வாழ்வியல் பண்பாடுகள், வணிகம் என்பவையோடு தொடர்புடைய மிக நெருக்கமான பிணைப்பு.
இத்தகைய பின்புலத்தில் வைத்து பார்க்கும்போது, இலங்கையில் உங்களுக்கு நட்பான தமிழர் இறையாண்மையுள்ள தேசம் உருவாகுவதற்கான நகர்வுகளையே நீங்கள் செய்யவேண்டும். அதுதான் உங்களின் தொலைநோக்கு பார்வையில் சரியான ராஜதந்திர நகர்வாக இருக்கமுடியும்.
இலங்கை விடயத்தில் இந்தியாவிற்கு அந்த சிரமம் கூட இருக்கவில்லை. விடுதலைபுலிகள் தமது ஆயுத போராட்டத்தின் ஊடாக தமக்கான தமிழர் இறையாண்மை தேசத்தை அமைப்பதில் வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தேவையாக இருந்தது உலக ஒழுங்கின் அங்கீகாரம் மட்டுமே.
• #சரி. இலங்கை எப்பொழுதும் அதனது வெளியுறவு கொள்கையை இந்தியாவை எதிர்நிலையில் வைத்துதான் வடிவமைக்கும் என்பது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும் என மேலே குறிப்பிட்டிருந்தேன்.
இது தெரிந்தும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஏன் “தமிழீழத்திற்கு எதிரான” அணுகுமுறையை மேற்கொள்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி எழுகிறது.
•#பொதுவாக இந்திய ராஜதந்திர வட்டத்தில் “தமிழீழத்திற்கு எதிரான” அணுகுமுறைக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1.முதலாவது இந்திய பெருங்கடலில் உள்ள அண்டைய நாடுகளை இந்தியா தனது sphere of influence இல் வைத்திருக்க விரும்புகிறது.
ஆனால் இந்த நாடுகளில் பிரிவினைவாதத்தை இந்தியா ஆதரித்தால், அவைகள் இந்திய எதிர்ப்பு மனநிலையிலேயே இருக்கும். அப்படி இருந்தால் இந்தியாவினால் தனது செல்வாக்கை பிரயோகிக்க முடியாமல் போகும்.
2.அண்டைய நாடுகளில் தனிநாட்டுக்காக போராடும் இயக்கங்களை ஆதரித்தால், இந்தியாவில் தனிநாடு கேட்டு போராடும் கோரிக்கைகள் வலுப்பெறும்.
இந்த இரண்டு காரணங்களுமே புவிசார் நலன் அரசியல் பார்வையில் சரியானவையே.
ஆனால் இந்தியா முன்வைக்கும் இந்த இரண்டு காரணங்களுடன் , இந்தியாவே முரண்படுகின்றது.
• #எப்படி இந்தியா இந்த இரண்டு காரணங்களுடன் முரண்படுகின்றது?
மூன்று உதாரணங்களை சுருக்கமாக தருகிறேன்.
1. 1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் கிழக்கு பாகிஸ்தான் எனும் பகுதி பங்களாதேசம் எனும் புதிய இறையாண்மை உள்ள நாடாக உருவாவதற்கு வழிவகுத்தது.
2. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் (Balochistan) தனிநாட்டுக்காக போராடும் போராளிகளை இந்தியா இன்றுவரை ஆதரித்து கொண்டிருக்கிறது.
இந்தியா எப்படி பாகிஸ்தானில் ‘பலுசிஸ்தான்’ எனும் தனிநாடு கேட்டு போராடும் போராளிகளுக்கு ஆயுதங்கள்,பயிற்சி என்பவற்றை வழங்குகின்றது என்பதை Ashok Swain எழுதிய “India must remember that Balochistan is not Bangladesh” எனும் கட்டுரை பின்வருமாறு விவரிக்கின்றது.
“It is no secret that India has been supporting the separatists in Balochistan in their fight again Pakistani military without openly admitting it.
Baloch activists have repeatedly admitted of receiving India’s ‘moral’ support and a representative of Balochistan Liberation Organization (BLO) has been living in New Delhi since 2009 .
Pakistan has been regularly accusing India for using its consulates in Jalalabad and Kandahar to fund, train and arm Baloch militants.
A decade back, senior officials of Pakistan had even alleged that 600 Baloch tribals were being trained by India’s Research and Analysis Wing (RAW) in Afghanistan to handle explosives, engineer bomb blasts, and use sophisticated weapons.
(Ashok Swain is Professor of Peace and Conflict Research at Uppsala University, Sweden.)
• சீனாவின் திபெத்
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் இந்தியா ‘திபெத்தினை’ சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. அதற்கு பதிலாக சீனாவும் சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது.
After Prime Minister Atal Bihari Vajpayee visit to China in June 2003, a joint declaration was signed in which India recognised that "the Tibet Autonomous Region is part of the territory of the People's Republic of China".
In Chinese view, this meant that India had, for "the first time", officially recognised Tibet as "part of China".
Some Indian and western commentators interpret it to mean that India had recognised China's "sovereignty" over Tibet.
In return China, over a period of time, incrementally took steps to acknowledge India's sovereignty over Sikkim.”
• இதன் பொருள் என்ன?
இந்தியா தமிழீழத்திற்கு எதிரான அதனது அணுகுமுறைக்கு சொல்லிய இரண்டு காரணங்களுடன் இந்தியாவே மேலே நான் கூறிய பங்களாதேசம், பலுசிஸ்தான், திபெத் விடயங்களில் முரண்பட்டிருக்கிறது.
• ஆக தமிழீழம் உருவாவதில் இதை தாண்டிய வேறொரு சிக்கல் இருக்கிறது.
இலங்கை தனது வெளியுறவு கொள்கையை இந்தியாவை எதிர்நிலையாக நிறுத்தித்தான் வடிவமைக்கும் என உறுதியாக தெரிந்தும் தமிழீழத்தை இந்தியா எதிர்ப்பதன் காரணம் என்ன?
அந்த காரணம் தமிழ்நாடு.
இதற்கான விடை இந்திய நிலப்பரப்பின் வரலாற்றில் இருக்கிறது.
இந்திய நிலப்பரப்பின் மிக மூத்த குடிகள் தமிழர்கள்.
அதை நிருபிக்கும் வகையில் சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களோடுதான் பெரும்பாலும் பொருந்தி போகிறது என்பது போன்ற வரலாற்று உண்மைகளை இந்திய ஒன்றிய அரசு மனதிற்குள் ரசிக்கவில்லை என்பதை எம்மால் தெளிவாக உணரமுடிகிறது. அல்லது வட இந்தியர்கள் ரசிக்கவில்லை அல்லது மற்றைய தென்னிந்திய திராவிட மாநிலங்களும் சேர்ந்து ரசிக்கவில்லை என்பதாக கூட பொருள் கொள்ளலாம்.
ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் வரலாறு இந்திய தேசியத்தின் assimilation முயற்சிக்கு ஒவ்வாததாக இருக்கிறது.
அதனாலேயே தமிழர் இனத்திற்கு என ஒரு தனி இறையாண்மையுள்ள தேசம் அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
• வாயால் வடை சுட்ட திராவிட தலைவர்கள் திராவிட நாடு கோரிக்கை வைத்த கதை நமக்கு தெரியும். அவர்கள் திராவிட நாடு கோரிக்கை முன்வைத்தது 50,60 களில்.
ஆனால் 1971 இல் பங்களாதேசம் உருவாவதற்கு இந்தியா போர் நடத்தியபோது, தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வு தலைதூக்கும் என இந்தியா கருதவில்லை.
ஆனால் தமிழீழம் உருவாகும்போது தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வு தலைதூக்கும் என இந்தியா கருதுகிறது.
• #போரியல்ரீதியாக இதை விளக்கலாம்
தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரண்டு வரலாற்றுரீதியான தாயக நிலப்பரப்பில் எது முதலில் தனி இறையாண்மையுள்ள அரசாக மாறினாலும் மற்றையது இறையாண்மையுள்ள அரசாக மாறுவதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு தமிழ்நாடு முதலில் தனி நாடாக மாறினால் தமிழீழம் தனிநாடாக மாறுவதற்கான போரியல்ரீதியான அனுகூலம் கிடைக்கும். காரணம் தமிழ்நாடு எனும் இறையாண்மையுள்ள அரசின் ஆதரவு.
அதேபோல தமிழீழம் முதலில் தனிநாடாக மாறினாலும் தமிழ்நாடு தனிநாடாக மாறுவதற்கான போரியல்ரீதியான அனுகூலம் உருவாகும். காரணம் தமிழீழம் எனும் இறையாண்மையுள்ள அரசின் ஆதரவு.
• #ஆக மேலேயுள்ள பந்தியை இதுவரை வாசித்து வந்தீர்களேயானால் இந்தியா ஏன் தமிழீழத்தை ஆதரிக்காது என்பதற்கான புவிசார் நலன் அரசியல், போரியல், வரலாற்று பார்வையிலான காரணங்களை வலுவாக வைத்திருக்கிறேன்.
இனிவரும் காலங்களில் சீன-அமெரிக்க மோதல் இறுக்கமடையும்போது மட்டுமே தமிழீழம் உருவாவதற்கான ஒரு ‘சிறு’ வாய்ப்பு உருவாகும். இதைப்பற்றி ‘சீன-அமெரிக்க மோதலும் தமிழீழத்திற்கான திறவுகோலும்’ என்ற தலைப்பில் முன்னர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன்.
இதை தவிர்த்து இந்தியா தமிழீழம் உருவாவவதை விரும்பாது.
• #இந்தியா தமிழீழம் உருவாவதை ஏன் விரும்பாது என்று தமிழ் மக்கள் ஆழமாக புரிந்து வைத்திருப்பது அவசியம்.
இல்லாவிடில் பலவிதமான கட்டு கதைகள் நம்மிலே புழக்கத்திலே இருந்து கொண்டிருக்கும்.
• அதில் ஒன்றுதான் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது போன்ற சதிக்கோட்பாடு. அதை நிருபிக்கும் வகையில் 80 களிலிருந்து இன்றுவரை இருந்த மலையாளிகளின் பெயர்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால் இதை வெறுமனே மலையாளிகளின் ஆதிக்கத்தினால் நிகழ்ந்த தவறான அணுகுமுறையாக என்னால் கருதமுடியவில்லை.
இந்திய கொள்கை வகுப்பாளர்களில் மற்றைய தேசிய இனங்கள் இருந்தபோதும் இந்தியா இதே ‘தமிழீழத்திற்கு எதிரான’ அணுகுமுறையைதான் கொண்டிருந்தது.
• அதேபோல் இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் உருவாக அனுமதித்திருப்பார் என்பது போன்ற அபத்தமான வாதங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. இதுவும் தவறான வாதமே.
• அடுத்த பிரபலமான கட்டுக்கதை ராஜீவ்காந்தி அரசியல் கொலை. ராஜீவ்காந்தி அரசியல் கொலை நிகழ்ந்திராவிட்டாலும், தமிழீழத்தை இந்தியா ஆதரித்திருக்க போவதில்லை.
#அடுத்தது 26 வருடங்களாக இந்த சதுரங்க ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த மிக முக்கிய ஆட்டக்காரர்களான விடுதலைபுலிகள்
• #விடுதலை புலிகள்
எவ்வாறு இறையாண்மையுள்ள அரசுகள் there are no permanent friends or enemies but permanent interests in international relations என்ற விதியின்படி இயங்குகின்றனவோ, அதே விதியின் படிதான் விடுதலை புலிகளும் தங்கள் போராட்டத்தை நடத்தினார்கள்.
#இந்திய நாடு அதனது நலனை முன்னிறுத்தி தமிழீழம் அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தால், தமிழர்களுக்கு என்று இறையாண்மையுள்ள அரசு வேண்டும் என்பதில் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.
தமிழர்களுக்கு என தனித்த இறையாண்மையுள்ள அரசு தேவை என்பதை தலைவர் பிரபாகரன் உறுதியாக நம்பினார்.
#தேவையா அல்லது தேவையில்லையா என்பதுதான் கேள்வி.
தேவை என்று முடிவாகிய பின் இலக்கை நோக்கி நகர்வதுதான் அடுத்த வேலை.
அதைத்தான் தலைவர் பிரபாகரன் செய்தார்.
தமது போராட்டத்தின் இலக்கை அடைவதற்கு புவிசார் நலன் அரசியல்/ராஜதந்திர/போரியல் ரீதியில் எந்த நகர்வுகளை செய்யவேண்டுமோ அதை தலைவர் பிரபாகரன் செய்தார்.