Saturday, 18 June 2022

விடுதலைப்புலிகளின் போர் ஆயுதங்களுக்கான வருடாந்திர செலவினம். க.ஜெயகாந்த்

விடுதலை புலிகளின் போர் ஆயுதங்களுக்கான வருடாந்தர செலவினம்

விடுதலை புலிகள் தமது இயக்கத்தின் வருடாந்தர வருமானம் , செலவினம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டதில்லை. வெளியிடவும் முடியாது. இது இரகசியமாக வைத்திருக்கப்படவேண்டிய தகவல்.

• #அதனால் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத Jane’s Defence Intelligence Review கூறிய தகவலை தரவுகளுக்காக எடுத்துகொள்ளலாம்.

உலகிலேயே அதிக வருமானத்தை கொண்ட இரண்டாவது  போராட்ட இயக்கம் விடுதலை புலிகள்தான் என அதில் கூறியிருந்தது.

அதனது 2008 ஆம் ஆண்டு கணிப்பின்படி, விடுதலை புலிகளின் வருடாந்தர வருமானம் $200-300 million என Jane’s Defence Intelligence Review கூறியிருந்தது.

The August issue of the Jane's Intelligence Report said the annual income of the banned terrorist group Liberation Tigers of Tamil Eelam(LTTE) is between US $ 200-300 million making it the rebel group generating the second biggest income both by legal and illegal business.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 45 ரூபாய்.

அதன்படி விடுதலை புலிகளின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாயில் 900 கோடி - 1350 கோடி.

“According to the report, though the estimated annual income of the LTTE is between USD 200 to 300 million its costs are only USD 8 million.”

• #விடுதலை புலிகள் தங்களது நிதியை திரட்ட, பரிமாற்ற எத்தகைய அதி நுட்பமான வலை பின்னல்களை வைத்திருந்தார்கள் என்பதையும் Jane’s Defence Intelligence Review பின்வருமாறு கூறுகிறது.

In a press release on Thursday (July 19) the magazine says that the terror outfit has become “one of the most sophisticated insurgencies in the world” mainly because of its “complex global network of financial resources and weapons”, that are being used to strengthen its campaign against Sri Lanka.

• #விடுதலை புலிகளின் இந்த வருடாந்தர வருமானம் பற்றிய Jane’s Defence Intelligence Review இன் தரவினை அன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள்  பதிவிட்டிருக்கின்றன.

அந்த ஊடகங்களின் இணைய தளங்களை இன்றும் நீங்கள் கூகிளில் தேடி வாசிக்கலாம்.

அத்தகைய சில இணையதளங்களின் இணைப்புகளை பின்னூட்டத்தில் தந்திருக்கிறேன்.

• #இந்த Jane’s Defence Intelligence Review கூறிய புலிகளின் வருடாந்தர வருமானம் US $ 200-300 million என்ற தரவிற்கு ஒத்ததான இன்னொரு தரவினை இலங்கையின்  Prof. Rohan Gunaratna உம் கூறியிருந்தார்.

Rohan Gunaratna is an international terrorism expert and Head of the International Centre for Political Violence and Terrorism Research (ICPVTR) at Nanyang Technological University in Singapore.

இலங்கையரான இந்த Prof. Rohan Gunaratna தொடர்ந்து விடுதலை புலிகளுக்கு எதிரான ஆய்வு கட்டுரைகளை எழுதி வந்தவர். விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்தோடு நெருக்கமாக இணைந்து செயலாற்றியவர்.

சரி. Prof. Rohan Gunaratna விடுதலை புலிகளின் ஆண்டு வருமானத்தை பற்றி என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போம்.

“Based on debriefing of LTTE activists detained or cooperating, and LTTE financial reports recovered by governments worldwide, the LTTE was a very wealthy terrorist and insurgent group. 

#The LTTE raised USD 25 million to 50 million per year from 1987 to 1993, USD 50 to 75 million per year from 1993 to 2002 and USD 200 million per year from 2002 to 2008.”

இதை ஒவ்வொரு காலகட்டங்களாக உடைத்தே தருகிறேன்.

1987- 1993 :  USD 25 million to 50 million 
1993- 2002 : USD 50 to 75 million
2002-2008 :  USD 200 million

இது லக்பிம எனும் சிங்கள தினசரி பத்திரிகைக்கு Prof. Rohan Gunaratna அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.

• #அதே நேர்காணலில், பின்னர் எப்படி உலக நாடுகளின் intelligence services ஒன்றாக இணைந்து செயலாற்றி புலிகளின் இந்த நிதி கட்டமைப்பை உடைத்தன என்பதையும் பதிவு செய்திருப்பார்.

அதையும் தருகிறேன்.

“The LTTE’s premier front Tamil Rehabilitation Organization raised millions of dollars that went into procuring arms, ammunition and explosives from North Korea, the principal supplier of weapons to the LTTE since 1997. 

#Unfortunately, it took several years for governments worldwide to work together to dismantle the LTTE international network. 

#Largely due to the good work of the western security and intelligence services in the West, the LTTE international network was rendered almost bankrupt by early 2009. 

Although unacknowledged, the LTTE cells were disrupted globally starting with the US. 

The disruption of the three LTTE fundraising and procurement cells in the US monitored by the FBI even before 9/11 created the impetus for Canada, Europe and Australia to share information and intelligence on the LTTE. 

This spate of operations led the US, India and a few other countries to share intelligence on the LTTE ships transporting weapons from North Korea to the LTTE leading to their destruction.”

• #விடுதலை புலிகளின் வருடாந்தர ஆயுத செலவினமே கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 1000 கோடிக்கு மேல் வருகிறது.

இலங்கை ரூபாய் மதிப்பில் இன்னும் அதிகமாக வரும்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 110 ரூபாய்.

விடுதலை புலிகளின் வருட வருமானம் அமெரிக்க டாலரில் $200-300 million. அதன் இலங்கை மதிப்பு ரூபாய் 2200 கோடி- 3300 கோடி.

இந்த வருமானத்தில் எவ்வளவு பகுதி புலிகள் இயக்கத்தின் மற்றைய கட்டமைப்புகளுக்காக செலவழிக்கப்பட்டது என்ற தகவல்கள் இல்லைதான்.

ஆனால் இந்த வருடாந்தர வருமானத்தின் பெரும் பகுதியை விடுதலை புலிகள் தங்களின் ஆயுத கொள்வனவுகளுக்காக பயன்படுத்தியிருப்பார்கள் என கருதமுடியும்.

இதன்படி விடுதலை புலிகளின் வருடாந்தர ஆயுத செலவினம் குறைந்தது 2000 கோடி-3000 கோடி இலங்கை ரூபாய்.

ஆக விடுதலை புலிகளின் வருட வருமானம் உயர உயர அதற்கேற்றால் போல அவர்களின் ஆயுத கொள்வனவும் அதிகரிக்கும். அதற்கேற்ப புலிகளின் போரியல் ஆற்றலும் உயரும்.

இதை தடுத்து நிறுத்த இலங்கை இராணுவமும் செலவுகளை வருடா வருடம் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

க.ஜெயகாந்த்

• #கொண்ட கொள்கையில் உறுதியையும், நேர்மையையும் அளவிடுவதற்கு ஒரு வரலாற்றை உதாரணமாக தருகிறேன்.

முந்தைய பதிவில் விடுதலை புலிகளின் ஆண்டு வருமானம் US $ 200-300 million என கூறியிருந்தேன்.

அது பற்றி Jane’s Defence Intelligence Review கூறிய தரவுகளையும், இலங்கையின்  Prof. Rohan Gunaratna கூறியிருந்ததையும் ஆதாரங்களுடன் தந்திருந்தேன். அந்த விடயங்களை திரும்பவும் நீங்கள் போய் வாசிக்கலாம்.

• #சரி. இனி விசயத்திற்கு வருகிறேன்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 45 ரூபாய்.

அதன்படி விடுதலை புலிகளின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாயில் 900 கோடி - 1350 கோடி.

இலங்கை ரூபாய் மதிப்பில் இன்னும் அதிகமாக வரும்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 110 ரூபாய்.

விடுதலை புலிகளின் வருட வருமானம் அமெரிக்க டாலரில் $200-300 million. அதன் இலங்கை மதிப்பு ரூபாய் 2200 கோடி- 3300 கோடி.

• #ஆனால் 2009 மே18 இன் அந்த இறுதி துளி வரை, தலைவர் பிரபாகரனிற்கு என்று சொந்தமாக ஒரு பைசா சொத்து இருந்ததில்லை. சொந்தமாக அவர் பெயரில் ஒரு பிடி நிலம் இருந்ததில்லை. இது அவரது குடும்பத்திற்கும் பொருந்தும். 

அது போல களத்தில் களமாடி வீரமரணம் அடைந்த அத்தனை விடுதலை புலி போராளிகளுக்கும் இது பொருந்தும்.

இத்தனை ஆயிரம் கோடி வருட வருமானம் இருந்தும், போர் களத்தில் இருந்த விடுதலை புலி போராளிகள் பைசா கையாடல் செய்ததில்லை. செய்யவும் முடியாது. 

• #கடுமையான தண்டனை

நிதி கையாடல் என்பதற்கு கடுமையான தண்டனை உண்டு. புலிகளின் பல ஒழுக்காற்று நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

• எப்பொழுது மே 18 இறுதி கணத்தில் அந்த தலைவரோடு விடுதலை புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்ததோ, அதன் பின்னர்தான் புலம் பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டலில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் தங்களின் வசமிருந்த சொத்துக்களை பதுக்க ஆரம்பித்தது எல்லாம் நடந்தது.

• #தலைவர் பிரபாகரன் இருந்தவரை, நிதி கையாடலில் ஈடுபட்டால்  மேற்குலக நாடுகளில் இருந்தால் கூட ஒருவர் தப்பிக்க முடியாது.

ஒரு நிகழ்வு ஒன்றை உதாரணமாக தருகிறேன்.

1990 களில், LTTE international spokesmen ஆக பணியாற்றியவர் லாரன்ஸ் திலகர். இவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார்.அவர் அந்த காலங்களில் மிக பிரபலம். அடிக்கடி பல ஊடகங்களில் அவரது பெயரை காணலாம்.

2000 களிற்கு பிறகு திடீரென அவரை காணவில்லை. அவரது பெயர் எங்குமே வருவதில்லை.

என்ன நடந்தது?

விடுதலை புலிகளின் சர்வதேச ஊடக பேச்சாளராக இருந்த லாரன்ஸ் திலகர் நிதி கையாடல் செய்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.

அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

லாரன்ஸ் திலகரிற்கும் தெரியும். தான் நிதி கையாடலில் ஈடுபட்டது விடுதலை புலிகளின் தலைமைக்கு தெரிந்து விட்டது என்று. அதனால் தமிழீழத்திற்கு சென்றால் தண்டணை உறுதி என்பதும் தெரியும்.

ஆனால் அவரை பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழீழத்திற்கு கொண்டுவந்து தண்டனை வழங்கப்பட்டது.

• #இன்னொரு கோணத்தில் அணுகி பாருங்கள்

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் உலகின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாதவை. அவர்களை யாரும் தொடமுடியாது. 

ஆக மிஞ்சிப்போனால் இன்டர்போலின் தேடுவோர் பட்டியலிலும், அமெரிக்க அரசின் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலிலும் அவர்களின் பெயரை சேர்க்க மட்டும்தான் முடியும்.  

எந்தவொரு சட்ட திட்டங்களுக்கு உட்படாதவராக இருந்தும் , ஆயுதமுனையாலேயே எதையும் சாதிக்கும் அதிகாரம் இருந்தும் தலைவர் பிரபாகரன் தனக்கெனவோ தன் குடும்பத்திற்கெனவோ ஒரு குண்டுமணியை கூட சேர்த்ததில்லை. 

தனது முழு கட்டுப்பாட்டில் இயங்கும் இயக்கத்தின் வசம் இத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தும், தலைவர் பிரபாகரனுக்கோ , அவரது  குடும்பத்திற்கோ சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இருந்ததில்லை. அவரின் போராட்ட வாழ்வு முழுவதும் சக போராளிகளுக்கு எது அமைந்ததோ அதுதான் அவருக்கும் கிடைத்தது.

#இந்த புள்ளிதான் நேர்மையின் வீச்சை, கொண்ட கொள்கையில் இருந்த உறுதியை அளக்கக்கூடிய இடம்.

• #ஒரு சுவாரசியத்திற்காக, தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையில் இருந்த,இருக்கும், உங்களால் புரட்சி, முத்தமிழ், தளபதி, இத்யாதி என பல பல ‘மயிர் சிலிர்க்க வைக்கும் அடைமொழிகளால்’ அழைக்கப்படும் தலைவர்களை இந்த நேர்மை,கொள்கை உறுதி அளவுகோலை வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி பாருங்கள்.

ஒரிருவரை தவிர அனேகமானோர் தேறமாட்டார்கள் என்பதே கள யதார்த்தம்.

க.ஜெயகாந்த்

• #விடுதலை புலிகளின் வருடாந்தர போர் ஆயுதங்களுக்கான செலவினம்

https://m.facebook.com/story.php?story_fbid=159720576561291&id=100075700470337&m_entstream_source=timeline

No comments:

Post a Comment