Friday 21 November 2014

மாற்றங்களை உருவாக்கும் மந்திரம்

வெட்டுப்பட்ட மரங்கள்
அழிந்து போகவல்ல,,,,,,
துளிர்த்தெழுவதற்கு.
பாதையின் இறக்கங்கள் 
பாதாளத்தை நோக்கியல்ல ,,,,
அடுத்து வரும்
ஏற்றத்தை நோக்கி.
கையை குத்தி கிழிப்பதால்
அது வெறும் முட்செடியல்ல,,,,
அதன் உச்சியில் இருப்பதோ
ரோசாப்பூ.
ஏமாற்றங்களை
மாற்றங்களாக
உருவாக்கும்
மந்திரச் சொல்,,,,-அது
பிரபாகரன் .
- தமிழரசன் அப்துல்காதர்.

ஒற்றை சொல் மந்திரம் ,,,,பிரபாகரன் ,,,,

தியாகம் தீம்பிழம்பாக 
வெளிப்பட்டது ......
தீர்க்க தரிசனங்கள் - நிறைவேறியது 
தந்தை செல்வாவின் குறிப்பில் .......
முறத்தால் புலியை 
அடித்த
தமிழ் மறவச்சி
துவக்கால் அடித்தால் _
புலியாக மாறி .....
தமிழ் நிலத்தின் புழுக்கலெல்லாம்
புலியான விந்தை !!!!!
ஒற்றை சொல் மந்திரத்தில்
ஒரு தேசம் விடுதலைப் பெறும் ...
********பிரபாகரன் *******...

Monday 10 November 2014

கப்டன் மயூரன்

வீர வணக்கம் !

கப்டன் மயூரன்
(நவம்பர் 1, 1970- நவம்பர் 11, 1993)
மேலைப்புலோலியூர்
ஆத்தியடி பருத்தித்துறை, இலங்கை 

மயூரன் என்ற புனைபெயரைக் கொண்ட பாலசபாபதி தியாகராஜா தனது பதினோழாவது வயதில்,1987
இல் விடுதலைப் போராட்டத்தில்இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். நவம்பர் 11,1993
அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில்
வீரமரணமடைந்தார்.

கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.
அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க—திண்ணம் கொண்டான் மயூரன்.

பருத்தித்துறை ஆத்தியடியில்
``````````````````````````````````````````````````````
பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.
அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே- காட்லியின் கல்வியைக் கை விட்டு—-1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.
இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க……ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.
மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.
திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.
அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா……….யா?.புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.

இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ……? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய்–அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும்.வாங்கி வா என்று அனுப்பினான்.
பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை; மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள்.

ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகிவிட்டான்.
மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊhதியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்

-தீட்சண்யன்..

மயூரனின் நண்பர்களின் நினைவில்
```````````````````````````````````````````````````````````
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டாய்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவி;ல்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம்
எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே………

..நண்பர்கள்…….

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
``````````````````````````````````````````````````````````````````````````````
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்)கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை—
என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

கப்டன் மொறிஸ்

பரதராஜன்.தியாகராஜா. ஆத்தியடி பருத்தித்துறை
வீரஜனனம் 12-09-1969 வீரமரணம் 01-05-1989
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் – ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே…! என்றான். அவன் தான் மொறிஸ்.
1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென
வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.
நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில ;ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.
சிறீலங்கா இராணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேறு;கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.
பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு.
முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.
ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக் கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான்.
அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக ஆ.ழு (ஆiநௌ ழிநசயவழச) என்று அழைப்பார்கள்.
1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.
தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு
தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது ஆக்கிரமிப்புப் படை.
மொறிஸோ இந்தியன் ஆமியின் கண்ணெதிரில்; அகபபட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான்.
ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகப்படாது தப்பித்துக் கொண்டான்;. அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகபடுபவன் அல்ல.
ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான். அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர்.
உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர்.
இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.
இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.
வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ்.
நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான்.
ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கமுன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.
அன்று—-1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)
மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்…….காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.
சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்:.அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.
அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான்.
தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.
500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.
சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.
தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன்
நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை.
அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா என்று கத்தினான்.
அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர்.
மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது.
இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.
மொறிஸ் தொடர்ந்து போராடினான்.
இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவாகளை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.
துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ்.
பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.
மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது.
மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!
மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான்.மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று-
பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.
———————————————–
நன்றி எரிமலை ஆனி 1993
செல்வகுமாரன் —–யேர்மனி

கப்டன் ஈழமாறன்

டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா… என்ர பெடியள் என்ன மாதிரியோ… விடடா மச்சான்…”
மருத்துவமனையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் “ஈழமறன்”. அவனின் நச்சரிப்பைத் தாங்காது மருத்துவரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும்.
“விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்.” என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறிப் பொது மகன் ஒருவனின் மிதிவண்டியில் ஏறி பயிற்சி நடக்கும் இடம் வந்து விட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்க விட்டவாறு மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது.
கால் நோவு மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் பயிற்சிப் பாசறை வந்து, தன் பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற் கொண்டான். இவ்வாறான மனவியல்பைக் கொண்டவன் இவன். ஆம்…!
இப் பயிற்சியானது சிங்களப் பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்…. ஆணவத்தைச் சிதைப்பதற்காய்…. தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்தவதற்காய்… சுமூகமான ஒரு பாதையைத் திறப்பதற்காய்…
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற் கொள்வதற்காய், ஆண் பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாய் குழுவின் தலைவனாக ஈழமாறனும்…
மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும்-ஆழத்துடன் அழகும் கொண்ட- கடற்கரைதனை அணையாக பெற்ற மாதகல்தனை தனது தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம், நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம் மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான். தாயக தாகத்தை தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகை தன்னை முகத்தில் பரவ விட்டிருப்பான். துடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனதையும் கவர்ந்து விடுவான். “வெளிநாடு வா” என மூத்த உடன் பிறப்பு அழைத்துக் கூட இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. “அண்ணா நீ தாய்க்காக உழைத்துவிடு, நான் தாய் நாட்டுக்காக உழைக்கப் போகிறேன்” எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான்.
ஆரம்ப கல்விதனை மாதகல் “சென். ஜோசப் பாடசாலை”யில் பயின்ற பின்னர், 1984ஆம் ஆண்டு தெல்லிப்பழை ‘மகாஜனாக் கல்லூரி’ யில் தனது கல்வியைத் தொடர்ந்தான். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் திறமையாச் செயற்பட்டு கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்று தனது படசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தான்.
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன் தனது சேவை இந் நாட்டுக்கு உடனடியாகத் தேவையெனப் புரிந்து 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். பயிற்சிக் காலத்தின் போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களைடும் பெற்றான். பயிற்சி தவிரந்த ஏனைய நேரங்களில் சக போராளிகளை அருகில் இருத்தி விடுதலைப் போராட்டங்களைப் பற்றி விளங்கவைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடவான். ஆகையினால் மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள்.
பயிற்சி முடிந்த வேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ். கோட்டைச் சண்டையில்” ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்கு பெறுப்பாளனாக நியமிக்கப் பட்டவுடனேயே காரைநகர் சண்டைக் களம் அவனை அழைத்தது. அதன் பின்னர் மன்னார் பரப்புக் கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர் கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும்சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது.
மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த ஈழமாறன் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்… எதிரியின் தாக்குதலால் காலிலும், கையிலும் காயமடைந்த இவனை தக்க முறையில் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள்.
காயம் மாறி முகாம் வந்தவேளை அவனுக்கு எல். எம். ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான். தனது வெள்ளைப் பற்களைப் போல…
இவனுடன் பழகிய நாட்களை எடைபோட்டுப் பார்க்கிறேன். அவை மறக்க முடியாதவை. மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ் வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் ‘செவிடுபட வைக்கும்’ அதிர்வோடு அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும் போது, ஈழமாறன் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான்.
“தலை போகப் போகுது பதியடா தலையை” எனக் கூறினால் “தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து தட்டி எழும்பு என்று தலையில் பிடித்து தூக்குவான்” என்பான். இக் கட்டான நேரங்களிற் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான். இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத் தோட்டம் கண் முன்னாலே தெரியும்…. இன்றைக்கு எல்லாத்தையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்…. எமக்கு பசியெடுக்கும் நேரமெல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை ஈழமாறனைக் காணவில்லை. “பரவாயில்லை” நாம் போய் வருவோம் எனக் கூறி எமது அணி முன்னேறியது. பழம் பிடுங்குவற்காய்.
மரத்தில் ஏறியாகி விட்டது. பழங்களைப் பறித்து காற்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டிருந்த வேளை… சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகில் எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும், நாம் மெதுவாக சத்தம் செய்யாது மரத்திலிருந்த இறங்கிப் பதுங்கி நின்றோம்…. வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது…. இந்த வேளையில் சண்டை பிடிப்பத எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் மனதிற் கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்த நின்று கொண்ட தாக்குதலுக்குத் தயாரானோம். ஈழமாறனும் லெப்டினன்ட் சித்துவும் சரித்தபடி… எமது செருப்புக்களை எடுத்துக் கொண்டு… சிங்களம் கதைத்து… எம்மை வெட்கப்பட வைத்துவிட்டார்கள். நிலமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள அசடு வழிந்தபடி அவர்களுடன் சேர்ந்த சிரித்தோம். இப்படி இவனது குறும்புகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
ஆறுமாதப் பிணைப்பால் ஒன்று பட்டு எமது பணி தொடர்ந்த வேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது… எமது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும்வரை கைகளை அசைத்த விடை கொடுத்தோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்து விட முடியாது.
பிரிந்து சென்ற அவன் “மின்னல்” தாக்குதலில் ஏ.கே. எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குனராகச் சென்றான். மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனது முப்படைகளினதும் உதவியுடன் மூர்க்கத்தனமாகத் தாக்கினான்…. ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்க முடியாத உறுதி பக்க பலமாக இருந்தது.
இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக் கொள்கின்றது… அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறை சாற்றி நிற்கும்… அவனது குருதியை எத்தனை முறை இந்த மண்மாதா ஏந்தியிருப்பாள்… நினைத்துப் பார்க்கிறேன்… காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய்யெனக் கூறியது… அன்பாகவும், பண்பாகவும் அதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் வாய்ப்புக் கிட்டியது.
பசறையில் பயிற்சி வழங்கப்பட்டது… மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்து விட்டான் ஈழமாறன். இவனுடன் யசி என்ற போராளியும் தான்…! “நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில” பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்று விடவில்லை. சிரித்தபடியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழே நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச் செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான்.
இவ்வாறு தான் செய்யும் சிறு தவறுகளாயினும் பெறும் தண்டனைகளை மகிழ்வுடன் ஏற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
நாம் அனைவரும் செல்லமாகச் “சம்மாட்டி” என்றுதான் அழைப்போம். அதற்கு ஒருநாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன் சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித் துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகிறது. கொதித்தெழுந்த அவன்… தனது கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தாங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. “என்ர கடைசித் தங்கச்சிக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா, அவள் தான்ரா என்ர உயிர்” என்று தங்கை மீதுள்ள பாசத்தின் ஆழத்தை தனது சக நண்பனிடம் கூறி வைப்பான். அடுத்து மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் -எதிரியானவன் “பலவேகய – 2″ எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் முளைத்தான் ஈழமாறன். இரண்டாம் நாட் சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்து தான். “ஏன்ரா மச்சான் அடிக்கையில்லை?” எனக் கேட்ட நண்பனிடம் “இயக்கம் படுற கஷ்டத்தில கண்டமாதிரி அடிக்கக் கூடாது… ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஷ்ரப்படுகுது தெரியுமா?” என, தனது சொற்பொழிவைத் தொடங்கி விட்டான்.
ஆம்…. எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான். கிலி கொண்டு அடிப்பான். ஏனென்றால் அவனுக்கு தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில் கூட நிதானமாகச் செயற்பட்டு எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி, எவ்வளவு அவனிடம் எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். “இலட்சியம் ஒன்றுதான் எங்களின் உயிர்….. அதற்காக நம் உயிர் போவது கூட எமக்குக் கவலையைத் தராது….”
சண்டை முடிந்தது சோகங்களை மனதில் தாங்கியவாறு சக தோழர்களின் சில உடல்களைத் தோழில் சுமந்தவாறும் மீளுகின்றோம்.
பழைய முகாம் களை கட்டுகிறது. “இனிப்புச் செய்வோமடா”. ஒரு நண்பன் கேட்க, “ஓம் நான் நல்லாச் செய்வேன். தேவையானவற்றைக் கொண்டுவாங்கோ” எனக் கூறியபடி அடுப்பு வேலைக்கு அயத்தமானான் ஈழமாறன். சீனி, தேங்காய், மா வெனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்த சட்டியில் பாணியை கிளறி விட்டுக் கொண்டிருந்தான் அவன். காதைச் செவிடுபடுத்துபடியாக எங்கிருந்தோ ஒர் ஷெல் வந்து விழுந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டு வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அதனைக் கேலிபண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
“டேய் எனக்கென்ன செய்யத் தெரியாதோ…? கொண்டுவா, உங்களுக்கு இனிப்பு தந்தால் சரிதானே…?” மீண்டும் வேலைகள் ஆரம்பமாக சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தன் கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது.
அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் பல மாத வேவுப் பணியின் பின்னர் – தாக்குதல்த் திட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கிறது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடி பாய்கிறது. கடலில் பாயும் கோழையவன், கடற்புலிகளால் மடிகிறான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது கடலில் கொட்டுகிறது. விமான எதிர்ப்பு ஒருபுறம் முழங்க கரும்பச்சை பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தவாறு நிலத்திலே ஓடிக் கடலில் கலக்கிறது….. தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடல்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது…
சடுகுடு விளையாடுவதைப் போல் மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது.
“அண்ணை குறிப்பிட்ட இடத்தைப் பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன். இது சத்தியம்.” உறுதியாகத் தளபதியின் கையில் அடித்துவிட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகிறான்.
குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கிறான். அங்கே… அங்கே… கடைசியாத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ் மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, பூநகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்…. அவனது தொலைத் தொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது.
“அண்ணை எனக்கு தந்ததைப் பிடிக்காமல் திரும்பி வரமாட்டன்” அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது.
அன்றொருநாள் எனது டயறியில், “என்ர நினைவாக இதை எழுதிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைத்திரு என்ன?” என்ற படி எழுத ஆரம்பித்தான்.
“நாம் அனைவருமே பல கொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையைச் சேர்ந்தவர்கள். பிரிவு எம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது”
இப்படிக்கு
தினேஷ்
அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
“ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது.!”
- த. பாரதி –

Sunday 9 November 2014

தென்மராட்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் குணா


Lt-Col-Kunaஇறப்ப்பினும் மறவோம்; இலக்கினில் தவறோம்!
திரும்பிப் பார்க்கின்றோம்.
சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம், கண்ணுக்குள் விரிகிறது அந்த நெடுவழிப்பாதை. எழ எழ விழுந்து, விழ விழ எழுந்து…… எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், எத்தனை எகிறிக் கடந்து எழ எழ விழுந்து…… விழ விழ எழுந்து………
திரும்பிப் பார்க்கின்றோம்.
இரத்தத்தையும், சாம்பல்மேடுகளையும், சவப்பெட்டிகளையும் தமிழனுக்குத் தந்தவர்களின் தலைவாடல்களுக்கு – கண்ணீரையும், கதறலையும், துன்படுவதென்றால் எப்படி இருக்குமென்பதையும் தமிழன் திரும்பவும் பரிசளித்து……………
திரும்பிப் பார்க்கின்றோம்.
தேடிப்போய்க் கையேந்தி நின்ற தமிழனை அடித்து விரட்டியவர்களை, தேடி வந்து கையேந்தி நின்று தமிழனிடம் “அடிக்காதீர்கள்” என இரக்க வைத்து …..
திரும்பிப் பார்க்கின்றோம்.
ஆகா…….! என்ன ஒரு ஆச்சரியம்……! எங்களையே அசத்திவிட்ட அதிசயம்…..! நம்ப முடியாமலல்லவா இருக்கின்றது……… எப்படி இது நிகழ்ந்தது…..? பிரமிக்கவைக்கிறதே……! நினைக்கையில் உயிர் சில்லிடுகின்றது………. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க, எங்கள் கண்களுக்கு முன்னாலேயே…… இது ஒரு கால மாற்றமா? இல்லை.
இது மாற்றப்பட்ட காலம்!
திரும்பிப் பார்க்கின்றோம்.
இந்த புதுயுகத்தின் பிரசவத்திற்காக எங்கள் தேசம் செலுத்திய விலைமதிப்பற்ற பெறுமதி………
ஒன்றா…… இரண்டா………. அத்திவாரக் கற்களாக, தாங்கும் தூண்களாக, உச்சியின் முகடுகளாக, முகடுகளின் கிரீடமாக, கிரீடத்தில் பதிந்த முத்துக்களாக……. தேசத்தின் நிர்மாணிப்பிற்காக நாங்கள் இழந்த இரத்தக்கனிகள்………… 6912+…………..
சாதாரண சகவாழ்வின் பற்றுதல்களை உதறியவர்கள்; தனிப்பட்ட சுயவாழ்வின் இலட்சியங்களைத் துறந்தவர்கள்: இனிய இளமை வாழ்வின் கனவுகளை மறந்தவர்கள்; தங்கள் அறிவு, ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் தாயக மண்ணுக்காய்த் தந்தவர்கள்; மக்களின், விமோசனத்திற்காக மரணத்திற்குள் வாழ்ந்தவர்கள்.
போர்முனைகளிலும் அவற்றுக்கு அப்பாலும் நாங்கள் சாதித்த ஒவ்வொரு மகத்தனா வெற்றிக்காகவும், உயிர்த்துடிப்போடு உழைத்து விழிமூடிய எங்கள் நெஞ்சினிய நண்பர்கள்.
தமிழீழத்தை – தமிழனுக்கொன்றோர் – தனியரசை – தமிழினத்தின் தன்னாட்சியை – மட்டுமே, ஆத்மார்த்தமான தாகமாகத் தங்களது ஆன்மாவில் சுமந்தவர்கள்; அதற்காகவே வாழ்ந்தார்கள், போராடினார்கள்; வீழ்ந்தார்கள்.
45 ஆண்டுகளாக இருமாந்துகொண்டிருந்த சிங்கள தேசத்தின் பேரினவாதச் சிந்தனைக்கு, தாயக மண்ணில் புலிகள் கொடுத்த மிகப்பெரிய அடி “ஒப்பறேசன் தவளை.”
அந்தக் காலத்திலும் வீழ்ந்து, அந்தக் களத்திற்காகவும் வீழ்ந்து, பூநகரியில் – சரித்திர வெற்றிக்கு மகுடம் சூட்டினார்கள் எங்கள் நெருப்புக் குழந்தைகள்.
அந்த மாபெரும் களத்தில் நாங்கள் செலுத்திய விலைகளில் ஒன்று, லெப். கேணல் குணா.
குணா!
தென்மராட்சி மண் எங்கள் தந்தையர் தேசத்திற்குத் தந்த ஒரு தலைசிறந்த புரட்சிவீரன்.
தமிழீழப் போர் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மெல்லென ஒளிர்ந்த படைத்தளபதி.
பாசம்மிகு மக்களின் உள்ளங்களை ஊடுருவி அன்போடு வீசிய குளிர்ந்த காற்று.
நாங்கள் அவனோடு இருக்க விரும்பினோம் என்பதை விடவும், அவனைப் போல இருக்க விரும்பினோம் என்பதே சரியானது.
ஐந்து அடி பத்து அங்குல உயரத்தில் அந்த ஆஜானுபாகுவான ‘இராணுவக் கட்டுடல்’, சதா புன்னகைத்துக்கொண்டு குதூகலமாய்ப் பழகும் அந்த நிலவு முகம். சுருள் சுருளாகப் படந்து தவழும் அந்தத் தலைமுடிகள், பார்க்கின்றவர்களை வசீகரித்துவிடுகின்ற அந்த மிடுக்கான தோற்றம், எங்களை மெய்மறந்து பார்க்கவைக்கும் ஓய்யாரமான நடை, அளவான பேச்சு, அமைதியான சுபாவம், விரைவான செயல், பண்பான அணுகுமுறைகள்….. எங்கள் கண்களுக்குள் நிறைந்து நிற்கின்றது அந்த வண்ணக் கோலம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் – திருநெல்வேலித் தாக்குதலுடன் போராட்ட வளர்ச்சிப்போக்கு புதியதொரு பரிமாணத்திற்குள் பிரவேசித்த காலகட்டத்தில்தான், விஜயராஜா என்ற அந்த இருபது வயது இளைஞனும் விடுதலைப் புலியாகி வந்தான்.
கல்வயல் அவனுடைய ஊர்; ஒரு விவசாயக் கிராமம். பச்சைப் பசேலென்ற மேலாடை அந்த நிலத்தின் சிறப்பழகு குச்சொழுங்கைகளின் புழுதியில் ஓடி, வயற்சேற்றில் விழுந்து, செல்லையா அப்புவின் காணிக்குள் இளநீருக்குப் பாய்ந்து கலைபட்டு, பன்றித்தலைச்சி அம்மன் திருவிழாவில் கூத்தடித்து, சாவகச்சேரி நகரப் பாடசாலையில் பாடப் புத்தகங்களோடு பக்கத்து வாங்குப் பிள்ளைகளையும் கவனித்து,
சின்ன வயதில் அந்த ஊர் அவனுக்குச் சொந்தம்; வளர்ந்த பின்னர் அவன் இந்தத் தேசத்திற்குச் சொந்தம்.
புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிப் பாதையில் போராட்டம் எடுத்த இன்னொரு புதிய வடிவமாக, பிரதேச ரீதியாக சிற்றூர்ப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு – போராட்டத்தை மக்கள் மயங்கப்படுத்தவும், மக்களைப் போராட்ட மயப்படுத்தவும் – அரசியல் வேலைத் திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில், குணா கல்வயலிற்கு நியமிக்கப்பட்டான்.
அப்பொழுது கடமையிலிருந்த்வர்களுள் சிறந்த பணியாற்றய் பிரதேசப் பொறுப்பாளர்களில் ஒருவனாக அவன் திகழ்ந்ததும், ஆனையிறவிலும் நாவற்குழியிலும் ‘ஆமி’ வெளிக்கிட்டதாக ‘வோக்கி’ அறிவித்தபோதெல்லாம் அந்தக் காலங்களில் விரைந்து திறம்படச் சண்டையிட்டதும், அவனது பற்றுறுதியும், அவனது வீரமும் துணிவும் – தளபதி கேடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முன்னணிப் போராளிகளுள் ஒருவனாக அவனை உயரச் செய்தன.
அந்த நம்பிக்கை – இயக்கத்தின் அதி முக்கியமானதும்; இரகசியமானதும், தலைவருக்குரியதுமான சில பொறுப்புக்களை அவனது தலைமேல் சுமத்தியது. ஒப்படைத்த வேலைகளில் அவன் காட்டிய ஈடுபாடும், ஓய்வற்ற கடும் உழைப்பும் – தலைவரிடத்திலும், கிட்டண்ணாவிடத்திலும் பாராட்டையும் நற்பெயரையும் பெற்றுத்தந்ததுடன், குணாவை இனங்காட்டியும் விட்டன.
கைதடியில் வெடித்த குண்டு – பொன்னம்மான், வாசுவோடு – தளபதி கேடியை எம்மிடமிருந்து பிரித்துவிட, தென்மராட்சியில் மந்தமாகிப்போன போராட்டப் பணிகளுக்கு புத்துயிர்ப்புக் கொடுத்து, மீளவும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்ற பெருமை குணாவைத்தான் சேரும்.
ஏற்கனவே சண்டைகளில் அவன் நின்றவன் தானென்றாலும் நெல்லியடி வரலாற்றுக் களம்தான் அந்த வீரனுக்கு சொல்லக்கூடிய முதற்சண்டை. இன்றைய உலகில வியப்புக்கிரியதாகி, சிங்கள தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் கரும்புலிகளின் சகாப்தத்தை மில்லர் என்ற மாவீரன் இடி முழக்கத்தோடு தொடங்கிவைத்தபோது – தென்மராட்சிப் படையணிக்குத் தளபதியாக குணா அந்தக் களத்திலிறங்கினான்.
காலச் சக்கரத்தின் சுழற்சி; இந்தியப் படையின் தரையிறக்கம்; இசைந்துகொடுத்தே ஆக வேண்டியிருந்த ஒரு நிர்ப்பந்தம். மாறுபட்ட ஒரு வடிவத்திற்குள் இட்டுச்செல்லப்பட்டது போராட்டம். மாயைத் திரை கிழிந்து, உண்மை வெளியிட்ட நாங்கள் காத்திருந்த நாட்கள்.
இந்தியா காக்கிரமித்ததற்கும் – அது சண்டையை ஆரம்பித்ததற்கும் இடைப்பட்ட அந்தக் காலம் மகா முக்கியமான், மறைமுகமான பணியொன்று அவனது மடியில் சுமத்தப்பட்டது. குணா மாடாய் உழைத்தான்.
ஆயுதங்கள் –
விடுதலைப் போராட்டத்தின் உயிர்நாடி; தேசத்தின் அசைக்க முடியாத இருந்புக் கவசம்; அன்று நாங்கள் பேசப்போனபோது அவர்கள் அதைத் தூக்கினார்கள் – பின்பு நாங்கள் அதைத் தூக்கியபோது அவர்கள் பேச வருகின்றார்கள். வரலாற்றைத் தலைகீழாக்கிய நெம்புகோல்கள்.படையியல் அரங்கில் போரிடும்போதும் சரி, அரசியல் மேசையில் பெசிடும்போதும் சரி, ஆயுதங்களே தமிழனின் பலம்; ஆயுதங்களே தமிழனுக்கு ‘வாழ்வு'; ஆயுதங்களே தனிழனின் ‘எதிர்காலம்’, ஆயுதங்களை நாங்கள் கைவிட முடியாது – ஒருபோதுமே கைவிடப்போவதுமில்லை.
தேசத்தின் முதுகெலும்பான ஆயுதங்களை, பக்குவமாய்ப் பாதுகாக்கவேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பு, அன்றைய சிக்கலான சூழ்நிலையில் குணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எவ்வளவுக்கெவ்வளவு அது முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவுக்கவ்வளவு அது இரகசியம் மிக்கது; எனவே, அந்தரங்கமகா மேற்கொள்ளப்படவேண்டிய மிகமிகச் சிரமமான ஒரு செயற்பாடு அது சில சமயங்களில்த்தான் அவன் அடுத்தவர்களை உதவிக்கு நாடினான். பெரும்பாலும், அவன் தனியாகவேதான். குணா சளைக்கவில்லை – சலிக்கவில்லை. இந்தியர்களின் கழுகுப் பார்வைக்கு மறைந்து – ஒழுங்கான உணவின்றி, போதுமான உறக்கமின்றி – அவன்பட்ட கஷ்டங்களை நாங்கள் பார்த்தோம்; அவன் சந்தித்த துன்பமும் துயரமும் கொஞ்சமல்ல.
திலீபனை இந்தியர்கள் கொன்று, கண்ணன் தனத்தோடு இன்னும் கொஞ்சப்பேரை இந்தியர்களோடு வந்தவர்கள் கொன்று, புலேந்தி அம்மான், குமரப்பா, தென்மராட்சியின் அப்துள்லாவோடு, பன்னிருவரை இந்தியர்களும் சிங்கலவர்களுமாகச் சேர்ந்து கொன்று….. வரலாற்றுக் காற்றின் வீச்சு, மக்களில் கவிந்திருந்த மாயைப்புகையை மெல்லக் கலைத்துச் செல்ல,
1987 ஐப்பசி 10 சரியான நாள்.
ஊறோசை சற்று உறங்கா இரவு பேராசையோடு விடிந்தது.
‘பூமாலை’ யோடு வந்தவர்கள் இங்கு ஒரு ‘புயற்காற்றை’ வீசச் செய்தார்கள்.
அன்பில் முத்தமிட என வந்த அமைதிக் திரை கிழிந்து – கண்ணில் யுத்தமிடும் வெறி கொண்டது ஆக்கிரமிப்புப் பூதம்.
‘றோ’ கொடுத்த தகவிலின்படி திட்டம் போட்டார்கள் 750 பேருக்கு 72 மணித்தியாலங்கள்.
யாழ்ப்பாணக் கோட்டையில் ஆரம்பித்து, அம்பாறைத் திருக்கோவில் வரை வியாபித்து, மணலாற்றுக் காட்டில் ‘முதல் அத்தியாய’ த்தை தலைவர் முடித்துவைத்தபோது – இரண்டரை ஆண்டுகளின் பின், வல்லரசுப் படைகள் மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறின.
போரியல் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட அந்த இந்திய – புலிகள் யுத்தம், அந்த வீரனை முழுமையாக இனங்காட்டிய நெருப்பு நாட்கள்.
முற்றுகிகள்; சுற்றிவளைப்புக்கள்; காட்டிக்கொடுப்புகள்; திடீர்ச்சன்டைகள்; கலைபாடுகள்; தப்பி ஓடல்கள்…………. எல்லாவற்றுக்கும் மத்தியில் நின்று, தென்மராடியில் புலிகளின் நாடித்துடிப்பாக இயங்கியவன் குணாதான்.
அவனது உறுதி அவனது துணிவு, அவனது வீரம், அவனது நம்பிக்கை, அவனது வழி நடாத்தல், ஒட்டுமொத்தமாக அவனேதான் – அத்துணை நெருக்கடிகளுக்கும் மத்தியில் அங்கு புலிகளை நின்று நிலைக்கச்செய்து, தளைத்தோங்கி வளரச் செய்தான்.
‘சயனைட்’டை நம்பியே விடிந்துகொண்டிருந்த அன்றைய நாட்கள்; அடுத்த காலையில் உத்தரவாதமற்றுப் பதுங்கிப்போகும் இரவுகள்; மரணம் உயிரை உரசிய சமயங்களில், குப்பியைப் பிடித்துக்கொண்டு தப்பித்து மீண்ட மயிரிழைப் பொழுதுகள்; நாளுக்கு நாள் வீழ்ந்துகொண்டிருந்த அன்புத்தோழர்கள்.
கனகம் புளியடியில் பதுங்கிப்பிடித்த பகைவனின் கைகளில் கீதன் விழிகளை மூட, கல்வயலில் ரோந்துப் படையிடம் அகப்பட்டு நகுலன் குப்பிகடிக்க, கொடிகாமத்தில் எதிர்பாராமல் மாட்டுப்பட்டு ரேகா சன்னங்களை ஏந்த, அல்லாரையில் முற்றுகைக்குள் சிக்கி புறோப்ளர், தனக்கே குண்டுவிக்க, மிருசுவில் அதிரடித் தாக்குதலில் கில்மன் களப்பலியாக, கச்சாய் வீதியில் இட்டுமுட்டாய் அகப்பட்டு நிதி வீழ்ந்துபோக, சரசாளியில் எதேச்சையாய் மாட்டிக்கொண்டு வின்சன் நஞ்சு தின்ன, பளையில் சுற்றிவளைப்பிற்குள் வேல்ராஜ் சயனைட் கடிக்க, ஊஸாணீள் பதுங்கித் தாக்குதலில் அக்பர் வீழ்ந்துபோக, நாவற்குழி சுற்றிவளைப்பில் அருள் குப்பி கடிக்க……….
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எங்கள் செல்வங்கள் விழவிழவும் குலையாத மலையாக இறுகிக்கொண்டே போனான் அந்தத் தளபதி.
நெருப்புக்குள் நின்றும் நீறாகிப்போகாமல் நிமிர்ந்த அந்த வீரன், எங்களையும் நிமிரச் செய்தான்.
வேம்பிராய்ச் சந்திக் கும்மிருட்டில், “தம்பி!” என்று சைக்கிளில் எட்டிப் பிடித்து மரித்தவன் “பீடி”யை உறிஞ்சியபோது, வெளிச்சத்தில் பார்த்தால், சீக்கிய முகம்! சைக்கிளால் தூக்கி அடித்துவிட்டு, குணா வேலியால் பாய்தோடியபோது துப்பாக்கிகள் உறுமின!
கெருடாவில் வீதியில் போனபோது எதிரே வந்தது இந்திய ஜீப்; பக்கத்து ஒழுங்கையால் மெதுவாகத் திருப்பி தப்பிப்போக முனைகையில், வந்து திரும்பிய ஜீப்பிலிருந்து முழங்கத் துவங்கியது ‘பிறண்’! இந்தியர்கள் கலைத்துச்சுட, இவர்கள் வலிந்து ஓட, இளைத்து இளைத்து ஓடி முள்ளுக் கிழித்து இரத்தம் ஒழுக, இயலாமல் விழுந்த பாப்பாவையும் இழுத்துக்கொண்டு வந்துசேர்ந்தான் குணா.
பெருங்குளத்தில் ஆமி கலைக்க ஓடி அடுத்த தெருவில் ஏற, ஆமி ஜீப்பில் வந்தான்! பக்கத்துக் கானியால் ஓடி இன்னொரு வீதியால் ஏற ஆமி நடந்து வந்தான்! அருகு வீட்டுக்குள்ளால் பாய்ந்து பின்னோழுங்கையில் ஏற, ஆமி குந்திக்கொண்டிருந்தான்! அடுத்த கானியால் பாய்ந்து விழுந்தடித்து ஓடி, விடயம் தெரியாமல் “என்னை மச்சா” னென்று சிரித்துக்கொண்டு வந்த கந்தன்ணையையும் இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான் குணா.
“நான் சாகலாம்; நீ சாகலாம், ஆனால், நாங்கள் சாகக் கூடாது.”Lt.Col.Kuna
வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட அந்தக் கத்திமுனை நாட்களில், குணா இதை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான். அவ்வளவு தெளிவு; அவ்வளவு உறுதி.
“நாங்கள் இங்கேயே நிப்பம்; எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அசையாமல் போராடுவம்; இடைவெளி விடாமல் நாங்கள் போராடிக் கொண்டேயிருப்பம். நாங்கள் சாகச்சாக, எங்கட இடத்திற்கு தலைவர் அடுத்தவர்களை அனுப்பிகொண்டிருப்பார், அதனால, நான் சாகலாம்; நீ சாகலாம், ஆனால், ஒருபோதும் நாங்கள் சாகமாட்டோம்.”
தூரத்தில் – சுற்றிவளைப்புக்கு நடுவில் – சயனைட் குப்பியும் கையுமாக நின்று “வோக்கி”யில் தகவல் சொல்லும் தோழனுக்கும் குணா இதைத்தான் சொன்னான். சொன்னதைப்போலவேதான் வாழ்ந்தான்; போராடினான் ஒவ்வொரு புலிவீரனுக்கும் தியாத்தை ஊட்டி, குணா இந்தியப் படைக்கெதிரான போரை நடாத்தினான்.
இழப்புக்களால் உறைந்துபோகும் மானிடப் பொது விதிக்கு மாறாக, இழப்புக்களிலிருந்து உரம்பெறும் பிரபாகரனின் புதுவிதிக்கு, குணாவும் இலகணமானான்.
தளம்பியவர்களுக்கு உறுதியூட்டினான்; குழம்பியவர்களுக்கு தெளிவூட்டினான்; தகர்ந்து நின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டியான்; ஒவ்வொரு புலிவீரனுக்கும் வீரத்தியூட்டி குணா இந்தியப் படைக்கெதிரான போரை நடாத்தினான்.
“இந்தியர்களுக்கு அடிக்கவேண்டும்; ஓயவிடாமல் அவர்களைத் தாக்கிக்கொண்டேயிருக்க வேண்டும்; எங்கள் தாயகத்தின் நெஞ்சில் குருதி வழியச் செய்தவர்களின் மேனியில் சன்னங்கள் துளையிடவேண்டும். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒருவகையில், அவர்கள் சேதப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் எங்க சொந்த விடயங்களில் தலையிட்டவர்கள் திரும்பி ஓடுமட்டும் அடித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.” ஒவ்வொரு புலிவீரனுக்கும் வேட்கையை ஊட்டி – குணா இந்தியப் படைக்கெதிரான போரை நடாத்தினான்.
சாவகச்சேரி நகரில் துரோகக் கும்பலின் பயிற்சி முகாமை வேவுபார்க்க அனுப்பிய நடேசுவையும் பாபுவையும், நுணாவிலுக்கு அருகில் அவர்கள் பதுங்கித் தாக்கி வீழ்த்திவிட்ட ஒரு துயர நாள்.
பொறுக்கமுடியவில்லை அந்த வீரனால்! அடிக்கு அடி கொடுக்கும் வெறிகொண்டான் வேங்கை; பழிக்குப் பழி எடுக்கும் சினம்கொண்டு தேடினான். உயிர் துடித்தது! உடல் கொதித்தது! அடிபட்ட புலியாகி குணா அடி கொடுக்க அலைந்தான். செத்துப்போனவர்கள் பற்றி எரியுமுன்னர் ஐந்து துரோகிகளையாவது கொன்று, ஆயுதங்களையும் எடுக்கவேண்டும். தாக்குதலணியையும் இழுத்துக் கொண்டு சாவகச்சேரியெங்கும் குணா அவர்களைத் தேடி அலைந்தான். துயரம்! ஆவேசம்! ஆத்திரம்! ‘எம் 16′ இன் ‘பிஸ்ரர் கிறிப்’பில் பற்றியிருந்த கைகள் துறுதுறுத்துக்கொண்டிருந்தன.
‘வேல்சினிமா’ முகாமிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். காரர்களுக்கு சேதி போனது. “எங்களுக்கு அடிக்க குணா தேடிக்கொண்டு திரியிறானாமாடா……!” இறுமாந்து வெளிக்கிட்டது ஒரு கூட்டம். தெருவில் போன வந்தோரையெல்லாம் பிடித்தடித்து, “நாங்கள் நிக்கிறமெண்டு குனாவிட்ட சொல்லுங்கோடா” என்று அட்டகாசம்செய்தது சொல்லிச்சொல்லி அடித்து அனுப்பிக்கொண்டு கூட்டம் வந்துகொண்டிருந்தபோது,
பெருங்குளம் சந்தியில் விழுந்தது நெருப்படி! ஓடஓடக் கலைத்துக் கலைத்துக் குடுத்தனர் புலிகள். 2 மைல் தூரம்! “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி”யென்று தலைதெறிக்க ஓடியது வந்த கும்பல். முகாமின் வாசல்வரை துரத்தித் துரத்தி அடித்து ஐதுபெரைக் கொன்று, ஆயுதங்களை எடுத்து வந்து, நடேசுவுக்கும், பாபுவுக்கும் பக்கத்தில் அடுக்கிவைத்து அக்ஞ்சளிசெய்த பின்னர்தான் – வீரர்களை அடக்கம் செய்ய குணா அனுமதி தந்தான்; அமைதியானான்.
நுணாவிலிருந்து கனகம் புளியடிக்கு ரோந்து போன ஒரு பெரிய படையணியை வழிமறித்து, திரும்பி அடித்துக் களைத்த ஒரு நீலச் சண்டை; புத்தூர்ச் சந்தியிலிருந்து வேம்பிராய்க்கு நகர்ந்த இன்னுமொரு பெரிய படையணியை இடைமறித்து துரத்து அடித்து பலத்த உயிர், பொருட் சேதத்தை உண்டாக்கி, முகாம் வாசல்வரை கலைத்து இன்னொரு நீளச் சண்டை; போன வந்தோரையெல்லாம் பிடித்து அடித்துக்கொண்டு மட்டுவிலிலிருந்து நுணாவிலுக்கு ரோந்தொபொன் அபடையனையை எதிர்த்துத் தாக்கி, ஆயுதங்களை எடுத்து மீண்ட ஒரு சண்டை; சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பானம்போன படைவண்டித் தொடர்மீது 09ம் கட்டையில்வைத்து அடித்து, 09 பேரைக் கொன்ற தாக்குதல்….. அவன் செய்தவை கொஞ்சமல்ல.
ஆனாலும் குணா பாவம். ஏனென்றால், அவன் செய்து முடித்த சண்டைகளைவிட, செய்ய முனைந்தும் முடியாமல்போன சண்டைகள்தான் நிறைய. அது ஒரு பெரிய பாதிப்பாக, கடைசிவரைக்கும் அவனுக்குள் இருந்துகொண்டுதானிருந்தது.
சண்டைபிடிகக் வேண்டும்; ஆயுதங்கள் எடுக்க வேண்டும்; எடுப்பதற்காக சண்டை பிடிக்கவேண்டும். அது ஒரு ஆறாத வெறி; தீராத தாகம்.
எத்தனையோ இடங்களில் வேவு பாத்தான்; எத்தனையோ தடவைகள் ஏற்பாடுகள் செய்தான்; எத்தனையோ இடர்பாடுகளுக்குள் தாக்குதணிகளை நகர்த்தினான்; எத்தனையோ இலக்குகளை நோக்கி வியூகம் அமைத்தான்.
அவனது துரதிர்ஷ்டம், ஏதோ ஒரு ‘இடையூறு’, ‘இடையூறாய்’ வந்து ‘இடையூறை’ ஏற்படுத்திவிட, அவனது கனவுகளையெல்லாம் கனவுகளாகவே போய்விட்டன.
கட்டைக்காடு திடீர் அதிரடித் தாக்குதலைத் தவிர, பெரிய சண்டைகளை நடாத்தும் வாய்ப்பு எதுவும் அந்த வீரங்க்க்குக் கிடைக்கக் வில்லை. அதனால் தனக்குக் கிடித்த ஒரு கிடைத்ததற்குரிய வாய்ப்பாகத்தான், அவன் பூநகரியைக் கருதினான்.
குணா பூனகரிக்குப் புறப்படும்போது, தனது எண்ணங்களையெல்லாம் ஈடேற்றும் ஆசையைச் சுமந்துகொண்டல்லவா போனான்! மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து, அல்லும் பகலும் பட்ட கஸ்ரங்களின் விளைச்சலைத் தேடி, மகிழ்ச்சியோடல்லவா அவன் புறப்பட்டான். மேனி சிலிர்த்து, உயிரிறுகி நின்று, கைகளைப் பற்றி “குணா சாதிக்கப்போறானடா மச்சான்” என்றல்லவா சொல்லிவிட்டுச் சென்றான். திரும்பி வருவானென நாங்கள் பார்த்திருந்தோமே……….. வெற்றிபெற்றேன் மைந்தன் ராஜநடைபயின்று வருவானென, தென்மராட்சி மண் காத்திருந்ததே………..!
ஆனால் குணா! …… எங்கள் உயிர் நண்பனே………… ஒரு இவைகூடச் சுட முடியாமல் நீ வீழ்ந்து போனாயாமேயய்யா! அந்தச் சேதி வந்தெங்கள் செவிகளில் மோதி முழங்கியபோது, எப்படியய்யா நாங்கள் தாங்குவோம்?ஆயுதங்களோடு மீண்டு வந்து தென்மராட்சிக்குப் பெருமை சேர்ப்பேன் என்றவனே………..! ஆளே வராமல் விட்டுவிட்டாயேடா குணா!
இந்தியப் போர்க்காலத்தில், உனது பொறுப்பிலிருந்த ஆயுதங்கள் ஒவ்வொன்று ஒவ்வொன்றாய்ப் போனபோது நீ பட்டவேதனை. எம் ஆயுதங்களை இந்தியர்கள் கைப்பற்றியபோது நீ துடித்த துடிப்பு, அவற்றை நினைத்து நினைத்து ஒருப்புக்கொள்ள முடியாமல் நீ பட்ட அவஸ்தை. நாங்கள் சிரித்துக் கதைக்கிரபோது எம்மோடு சேராமல் ஒதுங்கிப் போயிருந்து அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்கின்ற உன் மனநிலை………. ………. அதையெல்லாம் அவ்வளவு கெதியாக நாங்கள் மறந்துவிடுவோமா குணா?
உனது மனதறிந்த தலைவர் உன்னை மனலாற்றுக்குக் கூப்பிட்டதும், ஆறுதல் வார்த்தைகளால் உன்னை அமைதிப்படுத்தியதும், தளர்ந்து போய்விடாமல் உர்சாகமூட்டியதும், “பறிகொடுத்ததில் துவண்டு போகாமல் பறித்தெடு குணா” என்று ஊக்கப்படுத்தியதும், தோள்களில் தட்டி அவர் வழியனுப்பிவைத்துவிட மகிழ்ச்சியோடு நீ திரும்பி வந்ததும், அந்த வேட்கையோடேயே நீ நேற்றுவரை அலைந்ததும்…… எங்களுக்குத் த்ரியாதவையாடா குணா?
இப்போது ஆயுதங்களை அள்ளிவந்து குவித்துவிட்டு பார்த்து மகிழ்கிறோமேயய்யா… எங்களோடு மகிழ நீ ஏனடா வராமல் போனாய்?
குணா! எங்கள் செல்வமே! கண்திறந்து பாரனடா…… உந்தன் மீது விழுந்து விழுந்து கதறி அழுகிறார்கள் நீ நேசித்த மக்கள். அவர்களால் நம்பமுடியவில்லை; அவர்களால் தாங்கமுடியவில்லை; ஏதேதோ எல்லாம் சொல்லிக் கதறுகிறார்கள். எங்களது பிள்ளையா வீழ்ந்துபோனான்…..? அவர்கள் கதறுகிறார்களாடா… இலக்குவைத்து இந்தியர்கள் உன்னை வளைத்து வந்தபோது, பொக்கிளிப்பானில் நீ சுருண்டு கிடக்கையில், தங்கள் இறகுகளுக்குள் மறைத்துப் பாதுகாத்த அதே மக்கள்………… உனக்காக ஆமிபார்த்த கண்களைப் பாரடா, உன்னக்காக வேவுக்கு நடந்த கால்களைப் பாரடா, உனக்காக சோறூட்டிய கைகளைப் பாரடா, உனக்காக அடிவாங்கிய உள்ளங்களைப் பாரடா………… “எமது மக்களே எமது பலம்” என்றவனே! எங்கள் உயிரினிய நண்பனே குணா…….! எங்களுக்குள் ஒருவனாய்; தளபதியாய்; சகதோழனாய் எங்களோடு நீ வாழ்ந்த நினைவுகளில் மூழ்கி உள்ளம் நொறுங்கிப்போனதையா…….! இந்தியர் காலத்தில் உனது செல்வாக்கால், உனது நற்பெயரால், உனது திறமையால் எத்தனை தடவைகள் நாங்கள் தப்பி மீண்டோம். நீதானேயய்யா எங்களைப் பாதுகாத்தாய்….. எங்களை விட்டுப் போய்விட்டாயா குணா?
நினைவ்ழியாத அந்த யுத்த நாட்கள்!
தமிழ்ச்செல்வனுக்குப் பக்கத்துணையாக நின்று குணா, இந்தியாவுக்கு எதிரான போரை நடாத்திக்கொண்டேயிருந்தான்; இந்தியர்கள், குணாவைக் குறிவைத்து படையை நகர்த்திக்கொண்டேயிருந்தார்கள்.
அவன் அவர்களுக்குப் பெரிய தலையிடி; இந்தியப் படையாட்களின் தூக்கத்தைக் கலைக்கும் பயங்கரக் கனவிகளில் பேயுருவில் அவன் வருவான். நிம்மதி கெட்டது; அவன் அவர்களுக்குப் பெரியதொரு பிரச்சினையாகினான்; அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை.
நவீன சந்தை மாடியிலேறி காவலரணுக்குக் குண்டடித்து விட்டு, இறங்கி ஓடிய சிறுவனைத் துரத்திப்பிடித்து அடித்து நொறுக்க, “எறியச் சொல்லி குணா அண்ணை தந்தவர்.”
நள்ளிரவில் மறைந்து, ஊர்ந்து, முகாமிற்குள் முன்னாள் சுவரில் போஸ்ரர் ஓட்டுபவனைக் கண்டு, பதுங்கிச் சென்று பாய்ந்து பிடித்து அடித்து விசாரிக்க, “ஓட்டச்சொல்லிக் குணா அண்ணை தந்தவர்”
காவலரணுக்கு முன் வீதியால் கனதரம் போய்வந்தவரை சாதுவாகச் சந்தேகப்பட்டு பிடித்துக்கொண்டுபோய் அடித்து முறித்தபோது “பார்த்து வரச்சொல்லி குணா அனுப்பிவிட்டது.”
தாக்கிவிட்டுப் புலிகள் தப்பிப்போய்விட்ட அடுத்த நிமிடத்தில் ஊரையே வளைத்து எல்லோரையும் பிடித்து செம்மையாகச் சாத்துகிரபோது ” குணாதான் முன்னுக்கு நிண்டு சுட்டது.”
குணா நிற்பதாய் சேதி கிடைத்து ஆயிரமெனப் படையை நகர்த்தி, சந்துபொந்தெல்லாம் சல்லடைபோட்டு, ஊரையே திரட்டிப் பள்ளியில் குவித்து, அவன் இல்லை எங்கும் என்று நிம்மதியாய் மூச்சுவிட்டுத் தகவல் சாதனத்தை முடக்க, புலிகளின் அலைவரிசையில்”பரணி பரணி – குணா………. இப்பதான் புட்டும் கோழிக்கறியும் முடிச்சிட்டு இருக்கிறம்; நல்லபிடி.”
மக்களுக்கு அவன் கடலில் வாழும் மீன். இந்தியர்கள் எதைச் செய்தும், குணாவை எதுவும் செய்யமுடியவில்லை.
அந்தப் பற்றைக்காடுகள், குச்சொழுங்கைகள், குடிசனங்கள், எங்கள் ஆட்காட்டி குருவிகளும், அன்புக்கினிய நாய்க்களும்கூட……………. கண்ணுக்கு இமையாகி அவனைக் காத்தன.
குறிக்குள் தூங்கவிட்டுக் காவளிருப்பார் கிழவர். 3 மணிக்கே எழுந்து புட்டுக்கு மா குழைப்பாள் ஆச்சி பருப்பு ஊரைவிட்டு வெங்காயம் மிளகாய் வெட்டத் துவங்குவாள் அக்கா. தேநீருக்குத் தண்ணீர் வைப்பாள் தங்கை.
4மணிக்கு பெரியவர் மனமில்லாமல் தட்டியெழுப்ப – முகம் கழுவி, தேநீர் பருகி, சாப்பிட்டு, இருளோடு இருளாக இருளுக்குள்ளேயே அலுவல் முடித்து, மூத்தவன் முன்னாள் பார்க்க, இளையவன் பின்னால் பார்க்க – பக்கத்து வேலியால் “பிள்ளைகளை” அனுப்பிவைக்கும்போது, அடுத்த சந்தியில் நாய்கள் அகோரமாய்க் குறைக்கத் துவங்கும். அந்த இந்திய மனம் மெல்ல மெல்லக் காற்றைக் களங்கப்படுத்தும். ஊர் உறையும். நெஞ்சு விரிக்க கதவுகளைப் பூட்டிக்கொண்டு வீட்டார் முடங்குவார்கள். வீதிப் படலையை இந்தியச் சப்பாத்து உதைத்து திறக்கும் சத்தம் கேட்கும்….!
குனாவுக்குச் சோறு ஊட்டியவர்கள், குணாவுக்கு மருந்து கொடுத்தவர்கள், குணாவுக்கு படுக்கை போட்டவர்கள், குணாவுக்கு பாதை பொஆர்ஹ்தவர்கல், குணாவுக்கு காவல் இருந்தவர்கள்……….. தேடித் தேடித் பிடித்துச் சென்று, இந்தியன் அடித்து நொருக்கிக் கந்தல் துணியாக்கி, “அடுத்த தடவை சூடுதான்” என்று வீட்டுவாசலில் போட்டுவிட்டுப் போகவும்.
அன்றிரவு ஆடடித்துக் கரியாக்கி, அவனுக்குக் காவிக்கொண்டு போனார்கள் அவனுடைய மக்கள்.
கல்வயலில் கலைத்துக்கொண்டு வந்த இந்தியர்களுக்குத் தப்ப இவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நாலுபக்க வீதிகளாலும் எதிரி வளைத்துக்கொண்டிருந்தான். அந்த வீடுதான் வசதிப்பட்டது. வழமையாகப் படுக்கவைக்கப்பட்டிருக்கும் பாட்டி முற்றத்தில் கட்டிலில் கிடந்தாள். உடலியக்கம் நின்றுபோன ஆச்சி வானத்தைப் பார்த்தபடியேதான் எப்போதும் கிடப்பாள்; அசைவற்றவள் . கிழவி கண்டுவிட்டாள் சிக்கல் என்று, வேலிக்கரையோடு மெல்ல மெல்ல ஊர்ந்து, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து, அங்கொரு மூலைக்குள் பதுங்கிவிட மொய்த்துக்கொண்டு நூழிந்தார்கள் இந்தியர்கள். கிழவியை அவர்கள் மிரட்டுவதும், ஏதோ பதில்கள் அவள் சொல்வதும், திரும்பவும் அவர்கள் உறங்குவதும், பிறகும் அவளேதோ கூறுவதும் கேட்டது. ‘நல்லகாலம்……….. கிழவி காணேல்ல. அது கண்டிருந்துதெண்டால் இண்டைக்கு நாசமருப்புத்தான்’ மணித்தியாலங்கள் போயின. இந்தியன் போனதாய்த் தெரியவில்லை. வெளியில் எட்டிப் பார்ப்பதும் சிக்கல். இவர்கள் யோசித்துக்கொண்டிருக்க, முற்றத்தில் படுத்திருந்தபடியே கிழவிதான் சொன்னாள், “தம்பியவை வெளியில வாருங்கோடா, ஆமி போயிட்டான்போல் கிடக்கு.”
இரவுபோய்ப் படுத்த மீசாலை வீட்டில் விடிந்துவிட்டது. அறைக்குள் நான்குபேர். கிணற்றடியில் இரண்டுபேர். காட்டிக்கொடுத்தவன், வீட்டுக்குள்ளேயே இந்தியர்களைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். எட்டித்தொடும் தூரத்தில் எதிரிகள்; துவக்கெடுத்து சுடமுடியாத அண்மைய; மியிர்கூச்செறிந்தும் கணப்பொழுதுகள் குப்பிகள் வாய்களிற்குள் செருக, ” அடித்து விழுத்திக்கொண்டு பாயுங்கோடா!” கத்தினான் குணா. திகைத்த இந்தியர்கள் மலைத்து நிற்க, நடுவீட்டுக்குள்ளேயே கைச்சண்டை. மோட்டரைத் தூக்கி கூர்க்காகவுக்கு அடித்த அம்மா என்ற வீரனுக்கு கை கழன்றுபோக, இந்தியன் எஸ். எல். ஆரினால் அடித்து இன்னுருவனுக்கு மண்டை உடைந்துபோக, கட்டிக் குளித்த சாரம் முள்ளுக் கம்பியில் கிழிந்து அடுத்தவன் ‘ ஒன்றுமே இல்லாமல் ஓட, ஒரு வழியாக எல்லோரையும் சேர்த்தக் கொண்டு வந்து சேர்ந்தான் குணா. வீட்டாரையும் பிடித்து அள்ளி முகாமிற்குக் கொண்டுபோய்விட்டார்கள் இந்தியர்கள்.
“எமது மக்களே எமது பலம்” என்றால் அவன்; “எமது குணாதான் எமக்குக் காவல்” என்கின்றார்கள் அவர்கள்.
விடுதலைப் புலிகளின் ராஜதந்திரக் காய் நகர்த்தல் இந்தியப் படையை இங்கிருந்து நகர்த்த, வெடி முழக்கங்களோடு தொடங்கியது, சிறிலங்காவுக்கு எதிரான போர்.
தென்மராட்சிக் கொட்ட சிறப்புத் தளபதியாக இப்போது அவன்.
இந்தியர் காலத்தில் – நாவற்குழியிலிருந்து இயக்கச்சி வரோ ஒவ்வொரு குருந்தெருவினூடும் மக்களிடம் அவன் நடந்தான்; பின்பு எங்களின் காலத்தில் – அதே சந்து பொந்துகள் எங்கும், அதே மக்களைத் தேடி அவனது “பஜரோ” சில்லுகள் உருண்டன.
அன்றுவரை அவனைப் பாதுகாத்த மக்களை, அன்றிலிருந்து அவன் பாதுகாத்தான்.
போர்முனைகளில் இராணுவ வியூகங்களை நெறிப்படுத்திய அந்தத் தளபதி, ஊர்மனைகளில் அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்குபடுத்தினான்.
வரியா சனங்களுக்கு வேலை வாய்ப்புக்கள், இடம்பெயர்ந்தவர்க்ளுக்குக் குடியிருப்புக்கள், வேலையிழந்தவர்களுக்கு தொழிற்சாலைகள், பண்ணைகள், பாலர் பாடசாலைகள், சமூக மேம்பாடு வேலைப்பாடுகள்; பாரபட்சம் பாராமல் ஏற்றத்தாழ்வு காட்டாமல் – அந்தச் சமூகத்தினை உயர்த்த அவன் எல்லாவகையிலும் உழைத்தான்.
அனைத்து இடங்களிலும் அவனுக்குத் துணைநின்ற மக்களுக்காக, அனைத்து வகையிலும் அவன் பாடுபட்டான்.
1991ம் ஆண்டு சர்வதேசப் பிரசித்திபெற்ற இரு பெரும் போர்கள் உலகத்தைக் கவர்ந்தன. ஒன்று 27 நாடுகளைக் கூட்டுச்செர்த்துக்கொண்டு அமெரிக்கா, தனித்து நின்று ஈராக்கிற்கு அடித்த ‘பாலைவனப் புயல்'; அடுத்தது, முப்படைகளும் சேர்ந்து திரண்டு வந்து தாக்கியபோது. புலிகள் தனித்து நின்று எதிர்த்து மோதிய ஆனையிறவுச் சமர்.
தமிழீழம் எந்தக் காலத்திலும் சொல்லிப் பெருமைப்பட முடியும்.
ஆரவாரமான ஏற்பாடுகள், தூக்கமற்றுப்போனான் குணா.
போராளிகளுக்கு சிறிது ஆறுதல் கிடைத்தபோதும் – தளபதிகளுக்கு ஓய்வே இல்லை.
அந்தப் பெரும் தளத்தை முற்றுகையிட்டு – இறுக்கி – அதன் முகாங்களைப் படிப்படியாக தாக்கி அழிக்கும் மூலத் திட்டம்.
ஆரம்பித்த நான்காம் நாளே வெற்றிலைக்கேணி தரையிறக்கத்துடன் சமர் இருவேறு பரிமாணங்களைப் பெற்றது.
ஆனையிறவு தாக்குதற் போர்முறை; வெற்றிலைக்கேணியில் தற்பாதுகாப்புப் போர்முறை.
இருமுனைகளில் சமர் நிறுத்தமற்ற தொடர் சண்டைகள்.
சமராடிக் காயப்பட்டுப் போனவர்கள், காயம் மாற்றித் திரும்பவும் காலத்திற்கு வரவேண்டியிருந்த போர் அரங்கு.
1991 யூலை 27ம் நாள்.
தடைமுகாம் பகுதி மீதானா இரண்டாவது தாக்குதல் தொடுக்கப்பட்ட ஒரு நள்ளிரவு. குணாவின் கட்டளையின் கீழ் அந்த முயற்சி எடுக்கப்பட்டபோது, சூழ்ந்து நகர்ந்த தாக்குதல் அணிகளுக்குத் துணையாய் பிரதான வீதியால் முன்னேறிய எங்கள் கவசவாகனத்தின் தொடர்பு அறுந்துவிட, அதிலிருந்து சராவிடமிருந்து பதிலில்லை; அருகிலிருந்த சொனியிடமிருந்து தொடர்பில்லை; கூடப்போன குகதாசும் கதைக்கவில்லை………… என்ன நடந்தது…….? குணா குழம்பிப்போனான். தன்னிலை மறந்த அந்தத் தளபதி “ரி 56″ம் கையுமாக காலத்திற்குள் இறங்கினான். சண்டை வீரர்களோடு தானுமொரு வீரனாக – பொறி கக்கும் துப்பாக்கியுடன் பிரதான வீதி ஓரமாக – அவன் கவச வண்டியை நோக்கி நகர, ஏற்கனவே தான் தாக்கி முறியடித்துவிட்ட கவச வண்டியை நொறுக்கவென எதிரி ஏவிய ‘கனன்’ பீரங்கிக் குண்டு வெடித்துச் சிதற, சிதறிய குண்டின் ஒரு சிறு துண்டு, குணாவின் மூக்கில் துளைத்து உள்ளே போனது. பக்கத்திலிருந்தவர்கள் பலவந்தமாய் இழுத்த போதும் வரமறுத்து – மூக்காலும் வாயாலும் இரத்தம் ஓட ஓடச் சண்டையிட்டு சோர்ந்து………. துவண்டு……… செயலிழந்து வீழ்ந்தவனை, அதன் பின்னர்தான் தோழர்கள் தூக்கி எடுத்து பின்னால் கொண்டுவந்தார்கள்.
மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டு ஆனையிறவிலேயே கிடந்தான்.
அருகினில் குண்டு வீழ்ந்து வெடிக்கும் அதிர்ச்சிக்கெல்லாம், குருதி பெருக்கெடுத்து ஓடிக்கிடந்தபோதும் காலத்திலிருந்து செல்ல மறுத்துக் கொண்டிருந்தவனை – பொட்டம்மான் கடுமையாக உத்தரவிட்டு ‘அம்புலன்சில்’ வற்புறுத்தி ஏற்றி அனுப்பிவைத்தார்.
1992ம் ஆண்டு பங்குனி மாதம் 05ம் நாள்.
கருகே வேட்டைப் பகுதியில் ஆமி வெளிக்கிட்ட ஒரு உற்சாகமான காலைப்பொழுது; காவலரணிலிருந்து வீரர்கள் எதிகொள்கிறார்கள். பெருந்தொகையான படையினர்; போர்கலங்களின் அகோரமான தாக்கிதல்; களத்தில் நின்ற எம் வீரர்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
தனது சிறு குழுவுடன் எதோ அலுவலாக எங்கோ போய்க்கொண்டிருந்த குணாவுக்கு ‘வோக்கி’ சேதியைச் சொல்ல, விரைந்த ‘பஜரோ’ ஆனையிரவுக்குத் திசைமாறியது.
இப்படி நடக்குமென்று எதிரி எதிர்பார்த்திருக்கவே மாட்டான். முன்னேறியவர்களை முற்றுகையிட்டு ஒரு பாய்ச்சல். குறுகிய நேரத்தில் மூர்க்கத்தனமான அதிரடி. 20பேர்வரையில் கொல்லப்பட, வீழ்ந்தவர்க்ளையும் ஆயுதங்களையும் போட்டுவிட்டு, அவர்தம் தோழர்கள் தப்பினோம் பிழைத்தோமென மன்கிண்டினார்கள்.
1992 வைகாசி 28ம் நாள்.
“பலவேகய – 02″
எதிரி கட்டைக்காட்டிலிருந்து ஆனையிறவுக்குப் படையெடுத்தான். ஆனையிறவும் மூடி, பூநகரியும் மூடிப்போக கொம்படியே தஞ்சமேன்று மக்கள் போய்வந்துகொண்டிருக்க – பாதைக்கு குறுக்கே பகைவன் போட்ட படைவேலி.
குடாநாட்டு முற்றுகிக்காய் அவன் செய்த முதற்கட்ட அசைவு.
நாட்கணக்கான சமர்; தொடர் சண்டை; களத்தில் முன் முடியை வழினடாத்தியபடி குணா.
குலையக் குலைய குழுக்களை ஒழுங்குபடுத்தி. எதிரி நகர நகர புதிதாய் அரண்களை அமைத்து, துப்பாக்கிக்குத் துப்பாக்கி நிலையிடம் காட்டி, டார்வினின் ஆர்.பி.ஜி டாங்கியை நொறுக்க பக்கத்தில் வைத்து இலக்குக் காட்டி கடைசிவரைக்கும் – களத்தில் நின்றவன்….. பீரங்கிக் குண்டுக்கு உடல் பிய்த்து வீழ்ந்தான்.
பதற்றப்படாமல்……… நிதானமாக……………. ‘வோக்கி’யில் ரூபனை அழைத்து……… அருகில் வரச்சொல்லி………… ‘எம் 16′ ஐக் கொடுத்தவன் – மருத்துவமனையில்தான் கண் திறந்தான்.
1992 கார்த்திகை 24ம் நாள்.
பலாலிப் பெருந்தளத்தில் கிழக்குப் பாதுகாப்பு வியூகம் உடைத்தெறியப்பட்ட புகழ்பூத்த தாக்குதல்.
“குறுகிய நேரத்திற்குள் நடந்து முடிந்த கொடிய யுத்தம்” என சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் கேணல் சரத் முனடிங்க வர்ணித்த போர் அரங்கு.
முன்னணிச் சண்டைக் குழுக்களுக்குள் குணா சேர்க்கப்படவில்லை.
நீண்ட தாக்குதல் வளையத்தில் மகளீர் படையணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியில், பின் கள வேலைகளை அவனிடம் கொடுக்கப்பட்டிருந்தன.
தாக்குதல் ஆரம்பித்த சொற்ப நேரத்தில், எதிரியின் அரண்மனைகளை வீழ்த்தி உள்ளே நுழைந்த பெண் போராளிகள் முன்னேறிக்கொண்டிருந்த வேளை,
அவர்களைப் பின்பக்கத்தால் வளைத்துக் கொண்டான் பகைவன்.
சுற்றிவர எதிரி; நடுவுக்குள் எம்மவர்கள் அவர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டிருந்தார்கள்.
நிலைமை மோசமாகிவிட்டதைக் குணா கண்டான்; சண்டைக்குள் இறங்கினான் குணா. ஆவேசப்பாய்ச்சல்; அசாதாரனவேகம்; வளைத்து நின்ற எதிரியைத் தகர்த்தெறிந்து நிழைன்தது புலிகளின் சேனை.
கைப்பற்றிய ஆயுதங்களை, களமாடிய தூப்பக்கிகளை, காயப்பட்டு வீழ்ந்தவர்களை……….. எல்லோரையுமே , எல்லாவற்றையுமே இழுத்து இழுத்துக் கொண்டுவந்து வெளியில் போட்டது அவன்தான்.
1993 புரட்டாதி 29ம் நாள்
குணாவும், அவனது தென்மராட்சிப் படையணியும், பூனகரிக்குப் பாய பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, பகைவன் – கிளாலியைப் பிடிக்க முன்னேறினான். நோக்கம் பெரியது என்பதால் பயிற்சி பிற்போடப்பட முடியாததாகவும் – முக்கியத்துவமானதாகவும் இருந்தது. “யாழ்தேவி”யை புலோப்பளையில் தடம் புரட்டிய புகழ்பெற்ற தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகளுக்குள், அவனது படை சேர்க்கப்படவில்லை.
“எனது பிரதேசத்தில் எதிரி படையெடுக்கிறான்; நாம் போகமுடியாதுள்ளது.” குணாவால் தாங்க முடியவில்லை…….. இருப்புக் கொள்ளாமல் தவித்தான்………. அந்தரப்பட்டான்; சாப்பாட்டை மறந்தான். தூக்கமில்லாமல் எழுந்து திரிந்ததை நாங்கள் பார்த்தோம். அந்தச் சமரில் களமாட முடியவில்லையே என்று உண்மையிலேயே வேதனைப்பட்டான். எந்த நேரமும் ‘வோக்கியை’ எடுத்து நிலைமைகளைக் கேட்டுக்கொண்டே இருந்தான். அந்த இரண்டு நாட்களுமே அவன் துடித்த துடிப்பு இருக்கிறதே…….! அதை வெளியாட்களால் புரிந்துகொள்ள முடியாது.
1993 கார்த்திகை 10ம் நாள்.
“ஒப்பறேசன் தவளை”
மனித சாதனைகள் பதிவு எட்டில் – பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு மகத்தான போர்ச்சாதனை.
அனைத்துலகப் படைத்துறை வரலாற்றில் புலிகள் இயக்கம் படைத்த இன்னொரு இராணுவ விந்தை.
படையியலின் பலத்தை வைத்து அரசியலில் பேரம்பேச முனைவோருக்கு, புலிகள் விடுத்த பூகம்ப எச்சரிக்கை.
போர்முறையானது இருவகைப்படுகிறது. ஒன்று, ‘மரபுவழி யுத்த முறை'; அடுத்தது, ‘கெரில்லா (கரந்தடி) யுத்த முறை’, சர்வதேசப் புகழ்பெற்ற கெரில்லாப் போர்முறையில், பிரபாகரன் உலகில் அறிமுகப்படுத்திய நுட்பமான ஒரு புதுவடிவப் படை நகர்த்தல் பூநகரி வெற்றியின் தந்திரோபாயம்.
சுற்றுவேலியில் பகைவன் பார்த்துக்கொண்டு காவலிருக்க, புலிகள் நடுவீட்டில் தீ மூட்டிய அதிசயம் நிகழ்ந்தது.
பயிற்சி! இடையறாப் பயிற்சி! தொடர் பயிற்சி! நீண்ட கடும் பயிற்சி! – விடுதலைப் புலிகளின் படைவீரர்கள், ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டிவரத் தங்களையே வருத்தி உருக்கினார்கள்.
அந்த நாள் வந்தது.
“நீங்கள் ஒவ்வருவருமே என்னுடைய பிள்ளைகள்! எனது ஒரு பிள்ளையைக்கூட நான் அநாவசியமாக இழக்கத் தயாராக இல்லை! அதனால் – அசுர வேகத்தில் முன்னேறி நீங்கள் வீழ்த்தப்பட முன்னர் எதிரிகளை வீழ்த்தி, வெற்றிக்கனியைத் தட்டிப் பறியுங்கள்!”
போரிடும் படைகளில் தளகர்த்தராய் நின்று, தேசியத்தலைவர் வழியனுப்பினார்.
குணாவின் கையில் மின்னியது ஒரு வெள்ளிச் சங்கிலி. அது இரவு நகர்வுக்குப் பொருத்தமில்லாதது; எதிரிக்கு இனங்காட்டிவிடக் கூடியது. அருகில் வந்த தளபதி சொர்ணம், “உந்த மணிக்கூட்டைக் கழற்றித்தந்துவிட்டு போவன் குணா” என்றபோது.
திடீரென என்னவோபோல ஆகினான்; முகம் வாடியது; உண்மையிலேயே கண்கள் கலங்கின; தளபதி புரியாமல் விழித்தார். குணா சொன்னான். “இதை நான் ஒரு நாளுமே என்ற கையிலிருந்து கழற்றுவதில்லை அண்ணை, தலைவர் தந்தது………. சொல்லிவிட்டுக் குனிந்து மணிக்கூட்டைப் பார்த்தான்; கழட்டிக் கோல்சருக்குள் வைத்தான்.
ஒளியற்ற இருள்…….! நிலவற்ற வானம்………! கார்முகில் பன்னீர் தெளிந்து வாழ்த்தியது.
உறங்கிக்கொண்டிருந்த தேசத்தை நாளை உவகையோடு துயிலெழுப்ப, மரணம் விளையாடும் களத்தை நோக்கி நகரத் தொடங்கினர் புலிகள்.
சண்டைக்களம் அபூர்வமானது. நினைத்துப் போவது நடக்காமல் போகும்; நடந்து விடுவது நினையாததாய் இருக்கும்.
கும்மிருட்டு! தவறவிடப்பட்ட பாதையை பின்னர் சரிப்படுத்தி வேவு வீரன் இடத்தைக் காட்டினான் குணா ஆணையிட்டான்! முன்னணித் தாக்குதற் குழுக்கள் அரண்களை உடைத்துக்கொண்டு பாய்ந்தன! ஆவேசமான தாக்குதல்! வீழ்த்தப்பட்ட அரண்களின் ஊடு, பிரதான தாக்குதலணிகளோடு குணா முன்னேறினான். எதிர்பாராத விதமாக, தாக்கப்பட்ட அரண்களிலிருந்து பின்வாங்கிய எதிரி. பிரதான அணிக்குப் பக்கவாட்டில் வந்து பின்பக்கத்தால் தாக்கினான். மினிமி ஜீ.பி. எம்.ஜி கள் இவைகளை அள்ளிப்பொழிந்தன. முன்னால்ப்போன குணா, பின்னால் அடிவிழத் திகைத்து, ‘என்ரபொடியள்…….!’ என்று திரும்பி ஓடிவந்து தாக்க முயல………….! எங்கள் குணா………!
பூநகரி வெற்றியின் முதற் களப்பலியாய் சன்னங்கள் சல்லடையாக்க வீழ்ந்தான் எம் வீரன்!
ஒ! எங்கள் குணா……! தமிழீழப் போர்வானில் நம்பிக்கை நட்சத்திரமாய் மெல்லென ஒளிர்ந்த படைத் தளபதியே………! ஒவ்வொருவனினதும் உயிரினை ஊடுருவி இதமாக வீசிய குளிர் காற்றே………. முற்றுகையில் முன்னின்றாய், முதற் சாவு நீ கண்டாய்…………… போய்விட்டாய்!
நாங்கள் நடக்கிறோம்.
அதே குச்சொழுங்கை……….. அதே தோட்ட வெளி, அதே தென்னந்தோப்பு………….. அதே வழித்தடம்………. சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம்!
நினைவுப்பகிர்வு:- தி.இனியவன்.
விடுதலைப்புலிகள் (தை 1995) இதழிலிருந்து

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்

நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு
`````````````````````````````
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

அரசியலில் இணைவு
`````````````````````````````````
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

மறைவு
```````````````
நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

மாமனிதர் விருது
````````````````````````````
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.

வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்
```````````````````````````````````````````````````````````
எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 8 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது.

இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார்.

இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்றுபாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.

இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.
மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.

தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.

என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

தமிழர் மனங்களில் மாமனிதராக நிறைந்திருக்கும் ரவிராஜ்
```````````````````````````````````````````````````````````````````````````````````````அன்றைய தினம் காலையில் உரிமைகளுக்காக உரத்து ஒலித்த குரல் மௌனித்தது’ என்ற செய்தி எம்மை உலுக்கியது. பலரது அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒருவரது உடல் குறைந்த வயதான 44 வயதில் மண்ணோடு மண்ணானது வேதனைக்குரியது. உடல் மறைந்ததே ஒழிய உள்ளத்திலிருந்து எழுந்த மக்கள் மீதான உணர்வுகளின் பிரதிபலிப்பு இன்னும் மறையவில்லை. அவ்வாறான ஒரு உயிர் 1962 ஜூன் 25 ஆம் திகதி ஆசிரியர்களான வேலுப்பிள்ளை நடராசா, திசைநாயகம் மங்களேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தென்மராட்சி மைந்தனாக “ரவிராஜ்’ என்ற பெயரில் உதித்தது.

கல்வி, தொழில், குடும்பம்
```````````````````````````````````````
தனது பாலர் வகுப்பை சாவகச்சேரி பெண்கள் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி டிறிபெக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாண பரியோவான் கல்லூரியிலும் படித்து 19841986 சட்டக் கல்லூரியில் படித்து 1987 இல் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து சட்டத்தரணியாக தலைநிமிர்ந்தார்.

1990 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக சேர்ந்து இரு ஆண்டுகள் பணியாற்றி, பின்பு கொழும்பு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளர் பிரான்சிஸ் சேவியரின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து மனித உரிமைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு பல ஆண்டுகள் பணியாற்றிய பின் சுயமாக, கொழும்பில் தனக்கென ஒரு அலுவலகத்தை அமைத்து தொழில் ஆரம்பித்து தனது தொழிலில் கணிசமான வெற்றியும் கண்டார். பிரபல மூத்த சட்டத்தரணியும் பரிஸ்டருமான ஆர்.ஈ. தம்பிரத்தினத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில்புரிந்து பிரபலமான எயார் லங்கா குண்டு வெடிப்பு வழக்கில் அவருடன் எதிரிகளுக்காக வாதாடியதோடு தனித்து பல முக்கியமான வழக்குகளை பொறுப்பெடுத்து வெற்றியும் கண்டார்.

தனது பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க அவரும் 1990 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வைகுந்தன் காமாட்சி என்பவர்களின் புதல்வியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான சசிகலாவை காதலித்துக் கரம் பற்றி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

மக்களுக்காக அரசியலுக்குள் பிரவேசம்
`````````````````````````````````````````````````````````````
தனது இளமைப் பருவம் தொடக்கம் அரசியலில் ஆர்வம் காட்டிய ரவிராஜ் தந்தை செல்வாவின் அரசியல் கொள்கைகளினாலும் செயற்பாடுகளினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு அக்காலத்து தமிழ்த் தலைவர்களுடன் தன்னை ஈடுபடுத்தி அவர்களின் நன்மதிப்பினைப் பெற்று அரசியலினுள் பிரவேசித்தார். எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே உள்ளூராட்சி மன்றங்களினூடாக அரசியல் பாதையில் தனது தடத்தினைப் பதித்தார். பின்வருமாறு அவருடைய அரசியல் பயணம் அவரது மரணம் வரை தொடர்ந்தது.

சட்டத்தரணி பொன்.சிவபாலன் யாழ்ப்பாண மேயராக பதவியேற்ற போது துணை மேயராக பதவியேற்றார்.

2001 ஆம் ஆண்டு யாழ்.நகர முதல்வரான சட்டத்தரணி பொன்.சிவபாலன் மறைவிற்குப் பின் ரவிராஜ் முதல்வரானார்.

2001 டிசம்பர் 5 பாராளுமன்ற அரசியலுக்குள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2004 சித்திரை 2 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்ற அரசியலில் கூடுதலான ஈடுபாடு காட்டிய போதிலும் அதற்கு வெளியே தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டத்திற்கு பெரும் மதிப்பும் ஆதரவும் கொடுத்து வந்தார். தமிழ் அரசியல் தலைமைகளின் பாராளுமன்ற அரசியல் எந்த விதத்திலும் ஆயுதப் போராட்டத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்

மரணத்தால் மட்டுமே மறைந்தவர்
````````````````````````````````````````````````````
தனது வாழ்நாட் காலத்தில் சட்டத்தரணியாகவும் அரசியல்வாதியாகவும் தனது சமூகத்தின் மீது பற்றுள்ளவராகவும் வாழ்ந்த ஒரு மனிதனை மரணம் மறக்கடிக்க முடியாது என்பதை இவரின் சேவைகள் என்றுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதனால்தான் இன்னும் மக்கள் மத்தியில் மரணியாதவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தான் சட்டத்தரணியாக பதவியேற்றதில் இருந்து தனது சேவையை மக்களுக்காகவே அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக 1990 களில் மனித உரிமை இல்லத்தில் அவர் பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களையும் உயிராபத்துகளையும் ஏற்படுத்திய காலமாகும். அப்பாவித் தமிழ் மக்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவர் சென்று பார்வையிடாத சிறைக் கூடங்கள் இல்லை என்றே கூறலாம்.

அப்பாவித் தமிழ் மக்களின் தடுத்து வைப்புக்கான விடுதலை கோரி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடினார். அத்தோடு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தத் தொடர்புகளை இன விடுதலைக்காக பயன்படுத்தினார். அதிலும் யுத்த காலத்தில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தான் இறப்பதற்கு முன்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன் தனது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தையும் இலங்கை இனப்பிரச்சினையின் பால் ஈர்த்தெடுத்தார்.

தனது மனித உரிமைகள் செயற்பாட்டை தனியே குறுகிய நோக்கத்திற்காக மட்டுமன்றி ஆட்கடத்தல்கள், போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற உரிமை மீறல்களை துணிச்சலோடு தனியொருவனாகவும் அமைப்பு ரீதியிலும் முன்னெடுத்த ஒரு மாமனிதன் இவரே. சாதாரண ஊழல் கூடிய பொய்ப் பிரசாரங்களுக்கான அரசியலை முற்றிலும் வெறுத்தவர். பொது மக்களுக்கான அரசியல் என்ற கொள்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தனது அரசியலில் தான் வகித்த எந்தவொரு பதவியையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தியவரல்லர்.

அரசியல் மேடைகளென்றாலும் பாராளுமன்றமென்றாலும் சர்வதேச மட்டத்திலும் சரி தமிழர் பிரச்சினைகளை இவர் அளவிற்கு வேறொருவரும் இவர் வாழ்ந்த காலத்தில் பேசியிருக்க முடியாது. பெரும்பான்மை இனக் கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழர்களைக் காட்டிலும் வெறும் அமைச்சுப் பதவிக்காக மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுகபோகங்களுக்கும் பின்செல்லும் அரசியல்வாதியாக இவர் வாழ மறுத்த இவரின் தனித்துவமே இன்றும் இவரை மக்கள் மனதுகளில் நினைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றது.

அலுவலகங்களுக்குள்ளும், ஊடகங்களுக்கு முன்னும் மட்டும் இருந்து மக்கள் பிரச்சினைகளை பேசுவதை விடுத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்க் கருத்துகள் என்பவற்றின் மூலமாகப் பேசத்துணிந்தவர். தான் இறப்பதற்கு முந்தைய நாளிலும் கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்பாக இவர் தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேசத்தின் கண்களைத் திறந்ததுடன், இவர் கண்களை மூடுவதற்குக் காரணமாகவும் அமைந்தது என்று கூறலாம்.

மும்மொழிப் புலமை பெற்ற இவர் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு வளருவதற்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உரிமை மீறல்களையும் தட்டிக் கேட்டமையால் பெரும்பான்மையின மக்களிடத்திலும் இவருக்கென தனி மரியாதை உண்டு என்பதை இவரின் இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தியமை சான்று பகரும். இனப்பிரச்சினையை இவர் பார்த்த விதத்தை இவரின் கூற்றுகளிலிருந்தே அறியலாம்.

“சிங்களவர்களும் தமிழர்களும் இராணுவப் போராட்டம், இரத்தக் களரியை இந்த நாட்டில் பார்க்க விரும்பவில்லை. அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சிங்களவர் உதவினர். அவர்கள் யுத்தத்தினை விரும்பவில்லை. நான் பேச்சுகளை ஆதரிக்கின்றேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. கலிங்கப் போருக்குப் பின் அசோகச் சக்கரவர்த்தி கூறியது தான் இதற்கு முதல் உதாரணம்’

இயல்பிலேயே போராட்ட குணம் உடையவராக ஆனபோதிலும் நடைமுறை யதார்த்தத்தை பேசுபவராகக் காணப்பட்டதோடு, இன்று முடிந்திருக்கின்ற போருக்குப் பின்னரான சூழ்நிலையை அன்றே அவர் ஆரூடம் கூறியிருக்கின்றார். இந்தியாவில் முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற புரட்சிப் பாடல்களை அதிகளவில் விரும்பிக்கேட்கும் அதேநேரம் அதில் வரும் வசனங்களை வாயில் முணுமுணுக்கும் பழக்கத்தையும் ரவிராஜ் கொண்டிருந்தார்.

மக்கள் சேவையாளனுக்கு காலமளித்த பரிசு
```````````````````````````````````````````````````````````````````
பலமுறை உயிராபத்துகளில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய ரவிராஜுக்கு 11.10.2006 அன்றுதான் தான் இந்த உலகத்தை காண்கின்ற கடைசி நாள் என்ற உண்மை புரியாது போனது எம் எல்லோரையும் எப்போதும் வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும். தனது சொந்த மண்ணிலேயே தன்னை சங்கமமாக்க எண்ணிய இவர் போன்ற மக்கள் தலைவர்கள் எம் மத்தியில் அரிதாகவே உள்ளனர். பசியும் பட்டினியும் கொலையும் ஆட்கடத்தல்களும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒரு சூழலில் தன் போராட்ட வாழ்வை எதிரிகள் வழமை போலவே தமக்கே உரிய மிருகக் குணத்தில் இத் தலைவனின் உயிரைப் பறித்தது இன்று வரையிலும் தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்து களையப்பட முடியாத வேதனையாகவே உள்ளது. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் பொன் விழா காணும் நாயகனாக நம்முடன் வாழ்ந்திருப்பார்.

இன்று வரையிலும் தீர்வு எதுவுமின்றி அல்லல்படும் மக்கள் அனைவரினதும் நெஞ்சங்களில் எழும் ஏக்கம் ரவிராஜைப் போல ஒரு தலைவன் இல்லையே என்பதாகும். காலத்தால் வெல்லப்பட்ட இவரது மரணம் மக்கள் மனதுகளில் இவரை ஒரு மாமனிதனாகவே இன்றுவரையிலும் நிலைநிறுத்தியுள்ளது. “மனிதர்களுக்கு மட்டுமே மரணம் அவர்களின் சிந்தனைக்கு மரணமேயில்லை’

ச.ஆனல்ட் பிரியந்தன்
சட்டத்தரணி
http://www.eelamview.com/2012/11/10/mamanithar-raviraj/