Tuesday 8 July 2014

முதல் கடற்க் கரும்புலி காந்தரூபன் வீர வணக்கம்

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர்.
இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில் தமிழீழக் கடற்பரப்பிலும், அதற்கு அப்பாலும் சிறிலங்கா கடற்படையின் பல கடற்கலங்களை மூழ்கடித்தும், ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரை அழித்தும் 200 வரையான கடற்கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்ந்து தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர்.
தமிழீழ விடுதலைக்காய் தம்மை வெடியாக்கி, வரலாறாகிய கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Monday 7 July 2014

தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் பிறந்த நாள் ! ஜூலை 7


திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 71859 - செப்டம்பர் 18,1945ஒரு இந்திய அரசியல்வாதிசமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்,வழக்குரைஞர்தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்பறையர்மகாசன சபையைத் தோற்றுவித்துபறையன் என்ற திங்கள் இதழையும்நடத்தியவர்சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939வரை இருந்தவர்.


இளமைக்காலம்

சீனிவாசன் பழைய செங்கல்பட்டுமாவட்டத்தில் மதுராந்தகத்திற்குஅருகில் உள்ள கோழியாளம் என்கிறசிற்றூரில் சடையன் என்பவருக்குப்பிறந்தார்தெய்வபக்தி மிகுந்தகுடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச்சீனிவாசன் எனப் பெயரிட்டனர்.தொடக்கப்பள்ளியில் தந்தையின்பெயரின் முன் எழுத்திற்குப்பதிலாகத் தந்தையின்முழுப்பெயரையும் சேர்த்துஎழுதிவிட்டார்கள்அதனால்இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.
கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமைகாரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம்பெயர்ந்ததுஅங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறைதாண்டவமாடியதால்இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர்சென்றனர்.

வாழ்க்கை வரலாறு நூல்

இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரேசுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார்.இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல்மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கல்வியும் குடும்பமும்

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில்10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்ப்பன மாணவர்கள் எனத் தன்வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார்வறுமை காரணமாக பள்ளிக்கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார்தீண்டாமைக்கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியேஎந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார்1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகிஅம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்இவர்களுக்கு 2பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்நீலகிரியில் ஓர்ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார்பத்துஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890 இல் சென்னைக்கு வந்தார்.

பறையர் மகாசன சபை

1891-இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை'பறையன்என்ற திங்கள் இதழை நடத்தினார்இதே காலகட்டத்தில்தான்1.12.1891-இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின்முதல் மாநாட்டைக் கூட்டினார்அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றிஆங்கில அரசுக்கும்காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892-இல் அதைஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றிபதிவும் செய்தார்.
அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகுஇரட்டைமலைசீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத்திருமணம் செய்து கொண்டார்ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காதஅக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கப் பயணம்

இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடிதென்னாப்பிரிக்கா சென்றார்அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களைமொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.
இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல்பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியதுஅதனை ஒட்டி 1917-இல் ஆதித்திராவிட மகாசபை எம்சிஇராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார்.

சட்டசபை உறுப்பினர்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920 இல் நடைபெற்ற தேர்தலின்போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்துஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1937 வரை ஓர் அவை மட்டுமேஇருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டனஇரண்டாவதுதேர்தலுக்குப் பின் 19.11.1923-இல் இரட்டைமலை சீனிவாசன்எல்சிகுருசாமிஉள்ளிட்ட 10 பேர் (தாழ்த்தப்பட்டோர்சட்டசபையின் உறுப்பினர்களாகநியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும்எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லைஎல்லா நிலையிலும் நியமனம்மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

22.08.1924-இல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமானதீர்மானத்தை முன்மொழிந்தார்அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது.அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்வெளியிடப்பட்டது.
(எந்த வகுப்பையாவதுசமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும்,நபர்களாகிலும் யாதொரு பட்டணம்அல்லது கிராமத்திலுள்ள எந்த பொதுவழி (தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணைஇல்லையென்பதும்,
(இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும்எவ்வளவுமட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள்போகலாமோயாதொரு பொதுக்கிணறுகுளம் அல்லது பொதுமக்கள்வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவானவேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள்கட்டடங்கள் ஆகியனஇவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும்,தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது,உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும்அரசின்கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டதுஇது அனைத்துத்துறைகளுக்கும்அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ்அரசுச் செயலாளர்

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-இல்சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார்.அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்(சிவில்உரிமைகளுக்காகஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922 இல் எம்சிஇராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படிபறையர்பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர்அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுஅரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டதுபெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும்பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன்பஞ்சமன் என்றே பதிவுசெய்யப்படுகிறதுஇதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனஇரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர்பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர்அவர்கள்சேரிகளுக்கு வருவதில்லைஎனவே பரம்பரை மணியக்காரர் முறையைநீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராகவர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கைவைத்தார்இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்சி.குருசாமியும் முன் வைத்தார்இவர்களின் கோரிக்கை 60ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன்தெலுங்குமொழி தாழ்த்தப்பட்டோரான மாலாமாதிகாவை ஆதி ஆந்திரர் எனஅழைக்கும்போது புலையர்தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் எனஅழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட்உரையின் மீது உரையாற்றுவது வழக்கம்அவரது முதல் பட்ஜெட் உரை06.02.1925 அன்று தொடங்கியதுஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதிஒதுக்கீடுகல்வி வளர்ச்சிசுகாதார வளர்ச்சிபஞ்சமி நில ஒதுக்கீடுபோன்றவற்றை வற்புறுத்தினார்இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயேபேசினார்எம்சிமதுரை பிள்ளைசாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும்சட்டசபையில் தமிழிலேயே பேசினார்கள்.

மது ஒழிப்புத் தீர்மானம்

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம்மதுக்கடைகளை மூடவேண்டுமென்பதுகலால் வரி அதிகமாகக்கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளைதிறந்து வைத்திருந்ததுஇதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின்பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார்அறவே கடையை மூடச்சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறைநாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல்சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்அதை அரசுஏற்றுக்கொண்டது

ஆலய நுழைவுத் தீர்மானம்

சுப்பராயன், 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில்தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்றவேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்இத்தீர்மானத்தைஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார்இத்தீர்மானம் சட்டசபைவாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள்தாழ்த்தப்பட்டோர் கோயில்நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது.எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஆனால் இந்துக்களின்சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறிஇந்தியாவின் தலைமை ஆளுனர்(கவர்னர் ஜெனரல்ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்புகிட்டவில்லை.

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னைபச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றதுஇரட்டைமலை சீனிவாசனைத்தலைமை ஏற்கும்படி விஜிவசுதேவப் பிள்ளை முன்மொழிந்துவி.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையேஇரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.எம்.சிமதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார்வரவேற்புக் குழுவின்தலைவர் என்சிவராஜ் சிறப்புரையாற்றினார்.
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்தசைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழுஅமைப்பதும்ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளைவலியுறுத்துவதும் ஆகும்இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித்தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும்வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும்கல்விவேலைவாய்ப்புகளில்ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும்உயர்கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன்கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவுதிறக்கப்பட்டதுமதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக்குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு

1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர்,அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்றுகலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார்காந்தியுடன்தென்னாப்பிரிக்காவில் தனக்கிருந்த நட்பைக் கொண்டு இலண்டனில்காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிடமுயன்றார்ஆனால் பலன் இல்லைஅம்பேத்கருடன் இணைந்து காந்தியைஎதிர்க்கத் தொடங்கினார்கடைசி வரையில் அம்பேத்கருடனும்தமிழகத்தில்திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்படவேண்டும் என்றும்தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்பகல்வியிலும்வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்என்பதையும் வலியுறுத்திப் பேசினார்இதே கோரிக்கையை வலியுறுத்திஅம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக்கொடுத்த ஆவணம்தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத்தருவதாக அமைந்திருந்ததுஇரட்டைமலை சீனிவாசனை வட்டமேசைமாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டார் என்றகோபத்தில் எம்சிஇராசாஅம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போதுஇந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும் காந்திக்குஆதரவாகவும் செயல்பட்டார்.

மதமாற்றக் கருத்து

அம்பேத்கர் 1935இல் தான் பௌத்த சமயம் தழுவுவதை அறிவித்தபோதுஇரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே(அவர்ணஸ்தர்வருணம் அற்றவர்கள் ஆயிற்றேநாம் இந்துவாக இருந்தால்தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன்கருத்தைத் தெரிவித்தார்.

மறைவு


இரட்டைமலை சீனிவாசன் 1945 செப்டம்பர் 18, 2-45 மணியளவில் எண்.4, எம்.வீரபத்திரன் தெருபெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார்.