Wednesday, 15 January 2014

மாவீரன் கிட்டண்ணை

அன்றும் ஒரு இதேநாள் !
வஞ்சக இந்திய வலையிலே, வங்கக்கடல் நடுவிலே!
மானம் காக்க உயிர்துறந்தார்; 
பார் புகழும் கிட்டண்ணை !

கேணல் குட்டிசிறியுடனும்-இனம் காக்க வந்த எண்மவரும்; வானம் பார்த்த நடுக்கடலில் வீரச்சாவை எய்திநின்றார் !

சிங்களனுக்கு மாமாவாம் - சிறு நரி புத்தி இந்தியா ! திடுமென அண்ணையை சுற்றியே திருட்டுத் தனமாய் தாக்கியதே !

வானுலங்கு ஊர்திகளும் - வளமான ஆயுதப் படைகளும் - கொண்டு எம்மைதாக்கிடவே கொண்ட கொள்கை வீரத்துடன் துவக்கு பிடித்து எதிர்த்து நின்றார் ! 

சரணடையக் கூறி சவால் விட்டது சாக்கடை மேயும் இந்தியநாய் !
எம்முயிர் இழப்போமே ! மானம் இழப்போம் ?
எதிர்த்து நின்றது ஈழத்துப் புலி "

தாக்குப்பிடித்தனர் பதினைந்தாம் நாள்முழுதும்,
துவக்குப் பிடித்த கைகளுடன் ! விடிந்ததும் பொழுது ஜனவரி பதினாறு ;
தமிழீழவிடியலின் விளக்காக '

எரிந்தார் கிட்டண்ணை தோழர்களுடன் வீரச்சாவெய்தி !

அடங்கமாட்டோம் ! ஓடுங்கமாட்டோம் !
ஆக்கிரமிப்பு இந்தியசிங்களமே! அடிமைத் தளையுடைத்து ஆர்த்தெழுவோம் ! மீண்டும் யாம் ;
அப்பொழுது ?
முன்களத்தில் நின்றடிக்கும் கேணல் கிட்டு பீரங்கி படையணி !

வீண்டு எழுவோம் ! மீண்டும் வருவோம்

- தமிழரசன்

No comments:

Post a Comment