Tuesday, 5 May 2020

ஐரீசின் திலீபன் பொபி சான்ட்ஸ் (Bobby Sands)1954-1981.

பொபி சான்ட்ஸ்,  அயர்லாந்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த. ஒரு ஐரிஸ் குடிமகன்.

பிரித்தானியர்களின் அதிகாரத்திற்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் போராடிக்கொண்டிருந்த ஐரிஸ் குடியரசு இராணுவத்தில் (IRA) தன்னை இணைத்துக் கொண்ட போது அவருக்கு வயது 18.

விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தவுடனேயே ஏகாதிபத்திய அரசு சிறைப்படுத்தியது.சட்ட விரோதமாக  துப்பாக்கி பயன்படுத்தியது,பெருவாரியான ஆயுதங்களை பதுக்கிவைத்தது,வெடிகுண்டு வழக்கு என தொடர்ச்சியாக சிறையிலடைத்தது.

சிறையில் அரசியல் கைதிகள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டனர், அவர்களது தார்மீக உரிமைகள் மறுக்கப்பட்டது, மனித உரிமை மீறால்களுக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டனர்.

தங்களை அரசியல் கைதிகளாக நடத்தவேண்டும் ,சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பொபிசான்டும் அவரது தோழர்கள் 10 பேருமாக சாகும் வரை உண்ணாநோன்பை 1981 வருடம் மார்ச் 1 ஆம் திகதி தொடங்கினர்.

அவரது உண்ணாவிரத போராட்டம் நாளுக்கு நாள் நாடு தழுவிய எழுச்சியை ஏற்படுத்தியது,  உலக நாடுகள் மத்தியில் பேச்சு பொருளானது, இந்த நேரத்தில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே ஐரீஸ் குடியரசு இயக்கம்  (Irish Republican Movement ) சார்பில் நின்று தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

1987 செப்டம்பர் 15 ஆம் திகதி இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து
நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த லெப் கேணல் திலீபன் இந்தியத்தினால் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு எவ்வாறு  1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம்  திகதி வீரச்சாவடைந்தானோ !

அதே போன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான பொபிசான்டின் போராட்டம் 66 நாட்களில் முடிவுக்கு வந்தது ஆம் 1981 ஆம் ஆண்டு  மே மாதம் 5 ஆம்திகதி சுயநினைவற்ற நிலையிலேயே அப்போராளியின் உயிர் பிரிந்தது.அப்போது அவரது வயது 27.(பிறந்ததேதி 1954 ஆம் வருடம் மார்ச் 9 ஆம் திகதி) பின்வந்த நாட்களில் அவரின் தோழர்கள் பத்து பேருமே வீரச்சாவடைந்தனர்.

தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் அம்மக்களின் அகிம்சா வழி போராட்டங்களை எப்போதுமே கண்டு கொள்ளாது என்பது தான் உலக விதியும் வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

They won't break me because the desire for freedom, and the freedom of the Irish people, is in my heart. The day will dawn when all the people of Ireland will have the desire for freedom to show. It is then that we will see the rising of the moon.

அவர்கள் என்னை உடைக்க மாட்டார்கள் ,என் இதயத்தை (மனவலிமையை) தான் உடைக்க முயல்வார்கள் 

ஏனெனில் சுதந்திரத்திற்கான ஆசை,

 மற்றும் ஐரிஷ் மக்களின் சுதந்திரம்,

என் இதயத்தில் உள்ளது.

அயர்லாந்து மக்கள் அனைவருக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது தங்களுக்கு விருப்பமான சுதந்திரத்தை காண்பார்கள், எழுந்து வரும் சந்திரனை போல! 

என்கிற பொபிசான்டின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிரித்தானிய வல்லாதிக்கம் அவரது இதயத்தை உடைக்க முடியாமல் தோல்வியடைந்தது.

இறுதியாக பொபிசான்டின் கூற்று விடுதலைக்காக உலகமெங்கும் போராடி வரும் போராளிகளின் மனநிலையை பிரதிபலிக்கும்.

"Our revenge will be the laughter of our children."

எங்கள் பழிவாங்கல் எங்கள் குழந்தைகளின் சிரிப்பாக இருக்கும்.

வீரவணக்கம் தோழனே!  

தமிழரசன் அப்துல்காதர்

No comments:

Post a Comment