Friday, 15 May 2020

பிரிகேடியர் சசி மாஸ்டர்

எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரம் போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி!

தாங்கள் கொண்ட இலட்சியத்தில் பற்றுக் கொண்டவர்களாக அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது உன்னதமானது !

தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் தளர்ச்சியற்ற பிணைப்பு

அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் அரண்களுக்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.

தமிழீழத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரணுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.

அப்படிபட்ட ஆபத்தான வழிதடத்தில் களமாடி, வழிநடத்திய மாஸ்டர் சசிக்குமார் அவர்கள் மக்களிடம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமலேயே தாயகத்திற்காக இன்னுயிரை ஈந்தார்.

பன்னாட்டு சக்திகளும் ,சிங்கள அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் இதே நாளில் வீரச்சாவடைந்தார். 

படைத்துறை வரைப்பட தளபதி பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டருக்கு வீரவணக்கம்!
தமிழரின் தாகம்!
தமிழீழத் தாயகம்! 

No comments:

Post a Comment