Tuesday, 5 May 2020

விடுதலைப்புலிகள் நாள் (05.05.1976)

விண்ணதிர, மண்ணதிர, விரிந்தகடலதிர
கண் திறந்து வருக நம் கருப்பை உயிர்கள்.
கொற்றவை பெற்ற குழந்தைகளென
நெற்றிக்கண் திறந்து நிமிருக நம் பரம்பரை.
என் பிள்ளை களத்தில்…..
என் பிள்ளை களத்தில்…..
என் பிள்ளையும் களத்திலென்று
எல்லோரும் சொல்லுகின்ற எழுச்சி நிலை கைவந்தால்...
மண்வந்த பகையன்றே மடிந்து விழ மாட்டாதோ?

பொங்கியெங்கள் ஊர் புகவே போர்க்கருவி தூக்குவோம்.
போரில் பகை தொலையுமட்டும் ஊரினுள்ளே தாக்குவோம்.
தம்பி பிரபாகரனின் தானையிலே சேருவோம்.
தங்கத் தமிழீழம் வரும் நேரம் வரை சீறுவோம்.

-தமிழீழத்தேசியக்கவி புதுவை இரத்தினதுரை அண்ணை.

No comments:

Post a Comment