Thursday, 6 March 2014

எழுவாய் ! தமிழா !

எழுவாய் வரிபுலியாய் !
நல் இனமான 
என் தமிழா !

வருவாய் களம் 
திறமாய் பகை 
முடிப்பாய் நீ 
தினமே !

பகையாயிரம் 
புறமே வந்து
பழி வாங்கிய
போதும் ,

திடமாய் நின்று
களமாடிய
புலி வீரரை
பாராய் !

எடுப்பாய் இனி
விறைப்பாய் கையில்
பகை முடிக்கும்
துவக்கை !

எறியும் வெடி
இயக்கும் பொருள்
இயங்குவியலை
படிப்பாய் !

விழிப்பாய் இனி
தவிப்பாய் இனம்
பிடிப்பாய் அதை
தாங்கி !

துடிப்பாய் இனி
பொறுப்பாய்
நல்ல இளைஞர்களை
உருவாக்கு !

உடைப்பாய் சிறை
தமிழீழம் தனை
மீட்க உனை
உரமாக்கு !


#தமிழரசன் அப்துல் கதர் 

No comments:

Post a Comment