அண்ணா ! என் அன்பு அண்ணா !
உடன் பிறந்தான் இல்லையென்ற
குறையை தீர்க்க நீ வந்தாய் !
என் உடல் நரம்பு ஒவ்வொன்றிலும்
இனப்பற்றை நீ தந்தாய் !
கடந்த கால வேதனைகளை
காட்ட மாட்டாய் உன் முகத்தில் ,
கடந்து போகும் என உறுதியுடன் .
பலம் தருவாய் என் மனதில்!
இழிவும் அழிவும் சேர்ந்துப் போன
இனத்தில் பிறந்த காரணத்தால் .
வலிகள் மிக கோடிக்கோடி
அனுபவித்தாய் என் தாயக மடியில் .
இருண்டு போன வரலாற்றில்
வெளிச்சமாவாய் என் அண்ணா !
இளைஞர் படை தம்பிகள்
ஆயிரமுண்டு உன் அன்பால் !
வரும் காலம்
நமதாகும் வரலாறு ,
தமிழர் ஆட்சியில் எல்லாம்
ஒரு நாள் முடிவாகும் .
பிணைக்கப்பட்ட கைவிலங்கு ,
நொறுக்கி எறியும் அந்நேரம் ,
உவகை கொண்ட நெஞ்சத்துடன்,
வரவேற்பேன் நீர் வடியும் என் கண்ணோடு !
@ தமிழரசன்அப்துல்காதர்
உடன் பிறந்தான் இல்லையென்ற
குறையை தீர்க்க நீ வந்தாய் !
என் உடல் நரம்பு ஒவ்வொன்றிலும்
இனப்பற்றை நீ தந்தாய் !
கடந்த கால வேதனைகளை
காட்ட மாட்டாய் உன் முகத்தில் ,
கடந்து போகும் என உறுதியுடன் .
பலம் தருவாய் என் மனதில்!
இழிவும் அழிவும் சேர்ந்துப் போன
இனத்தில் பிறந்த காரணத்தால் .
வலிகள் மிக கோடிக்கோடி
அனுபவித்தாய் என் தாயக மடியில் .
இருண்டு போன வரலாற்றில்
வெளிச்சமாவாய் என் அண்ணா !
இளைஞர் படை தம்பிகள்
ஆயிரமுண்டு உன் அன்பால் !
வரும் காலம்
நமதாகும் வரலாறு ,
தமிழர் ஆட்சியில் எல்லாம்
ஒரு நாள் முடிவாகும் .
பிணைக்கப்பட்ட கைவிலங்கு ,
நொறுக்கி எறியும் அந்நேரம் ,
உவகை கொண்ட நெஞ்சத்துடன்,
வரவேற்பேன் நீர் வடியும் என் கண்ணோடு !
@ தமிழரசன்அப்துல்காதர்
No comments:
Post a Comment