Tuesday, 15 July 2025

ஆனாலும் சாகும் வரை சண்டையிட்டார்கள்.

மரணம் என்பது 
பார்த்துப் பார்த்துப் பழகிப்போன 
பழைய நண்பன்
எப்போதும் விலகாமல் 
பக்கத்தில் நிழலாக வந்திருக்கிறான் 

அதனாற் தான் 
அவர்களின் மரணம் என்பது 
அவமானத்தின் மரணமாக இல்லாமல் 
வீர மரணமாக இருந்தது

கைப்பிடியளவு காற்று 
அவிழ்ந்து கரையும் வரை 
கைவிடாத கொள்கையை 
பக்கத்தில் இருந்து பார்த்த மரணம் 
விடைபெறும் அவர் கதையை 
வெறும் சாவாக விடாமல் 
வீரச்சாவு என்றழைத்தது 

பாவிகள் நமக்கந்தப் 
பாக்கியம் இல்லை 

———

சித்தம் கலங்கிக் சிதைந்து 
ஆளாளை நோக்கி
அவரவர் அறிவறிந்த 
ஒற்று அமைப்புகளின் 
பெயர் சொல்லிச் சொல்லி 
இற்றுப் போய்ப் புழுத்து 
இறப்பதா எமது விதி.. ? 

-திரு திருக்குமரன்

No comments:

Post a Comment