கன்னத்தில் அறையும்
எந்தக்கைக்கும்
மறுகன்னத்தில் அறையும்
வாய்ப்பே இல்லாமல்
அந்தக்கணமே
அறுத்தெறியப்படும்
வெட்டப்படுவது இனிமேல்
நகங்களல்ல-
விரல்கள்.
உனது மகுடங்களை
மூழ்கடிப்பதற்கே
வேர்வைத்துளிகள்
வெள்ளமாய் இணைகின்றன.
No comments:
Post a Comment