Thursday 23 October 2014

செஞ்சோலை உருவாக்கப்பட்டது ....

தமிழீழத் தேசத்தின் மீதான சிங்கள யுத்தக் காரணிகளால் பெற்றோரையும் உற்றாரையும் இழந்து அனாதைகளாகி விட்ட தமிழீழக் குருத்துகளுக்கு தமிழினத்தின் தாயும் தந்தையுமான மேதகு தேசியத்தலைவர்கள் அவர்களால் உண்டு உறைவிட பள்ளியாகவும் அச்சிறார்கள் தங்களை அனாதிகள் என்று நினைத்துவிடா படி ஒரு வீடாகவும் உருவாக்கப்பட்ட செஞ்சோலை இன்று தான் தொடங்கப்பட்டது
அக்டோபர் 23/1991
//////// யுத்த சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம்.
என்று குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment