Tuesday, 15 July 2025

புர்கினோ பாசோவிற்கு சர்வதேச வங்கிகளிடமிருந்து கடன்கள் தேவையில்லை - அதிபர்

புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரொரே, காலனித்துவ கால ஐரோப்பிய நீதித்துறை அங்கிகளை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான பாரம்பரிய ஆப்பிரிக்க உடைகளால் மாற்றியுள்ளார், இது நாட்டின் கலாச்சார வேர்களை வலுப்படுத்துகிறது.

உள்ளூரில் நெய்யப்பட்ட பாசோ டான் ஃபானி துணியிலிருந்து வடிவமைக்கப்பட்ட புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகள், தேசிய பெருமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அதே வேளையில் காலனித்துவ மரபுகளைக் குறைப்பதற்கான உந்துதலை பிரதிபலிக்கின்றன.

இந்த சீர்திருத்தம் புர்கினா பாசோவின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கும், பூர்வீக ஜவுளிகளை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

நோட்டரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து சட்ட வல்லுநர்களுக்கும் நீட்டிக்கப்படும் இந்த மாற்றம் நாட்டின் நீதித்துறை அமைப்பை காலனித்துவ நீக்கம் செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த படியைக் குறிக்கிறது.

புர்கினா பாசோ ஐரோப்பிய காலனித்துவத்தின் எச்சங்களை எட்டி மிதித்துள்ளது.

புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரொரே, காலனித்துவ கால ஐரோப்பிய நீதித்துறை அங்கிகளை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான பாரம்பரிய ஆப்பிரிக்க உடைகளால் மாற்றியுள்ளார், இது நாட்டின் கலாச்சார வேர்களை வலுப்படுத்துகிறது.

உள்ளூரில் நெய்யப்பட்ட பாசோ டான் ஃபானி துணியிலிருந்து வடிவமைக்கப்பட்ட புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகள், தேசிய பெருமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அதே வேளையில் காலனித்துவ மரபுகளைக் குறைப்பதற்கான உந்துதலை பிரதிபலிக்கின்றன.

இந்த சீர்திருத்தம் புர்கினா பாசோவின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கும், பூர்வீக ஜவுளிகளை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

நோட்டரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து சட்ட வல்லுநர்களுக்கும் நீட்டிக்கப்படும் இந்த மாற்றம் நாட்டின் நீதித்துறை அமைப்பை காலனித்துவ நீக்கம் செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த படியைக் குறிக்கிறது.

ஆனாலும் சாகும் வரை சண்டையிட்டார்கள்.

மரணம் என்பது 
பார்த்துப் பார்த்துப் பழகிப்போன 
பழைய நண்பன்
எப்போதும் விலகாமல் 
பக்கத்தில் நிழலாக வந்திருக்கிறான் 

அதனாற் தான் 
அவர்களின் மரணம் என்பது 
அவமானத்தின் மரணமாக இல்லாமல் 
வீர மரணமாக இருந்தது

கைப்பிடியளவு காற்று 
அவிழ்ந்து கரையும் வரை 
கைவிடாத கொள்கையை 
பக்கத்தில் இருந்து பார்த்த மரணம் 
விடைபெறும் அவர் கதையை 
வெறும் சாவாக விடாமல் 
வீரச்சாவு என்றழைத்தது 

பாவிகள் நமக்கந்தப் 
பாக்கியம் இல்லை 

———

சித்தம் கலங்கிக் சிதைந்து 
ஆளாளை நோக்கி
அவரவர் அறிவறிந்த 
ஒற்று அமைப்புகளின் 
பெயர் சொல்லிச் சொல்லி 
இற்றுப் போய்ப் புழுத்து 
இறப்பதா எமது விதி.. ? 

-திரு திருக்குமரன்

இன்குலாப் கவிதை.

கன்னத்தில் அறையும்
            எந்தக்கைக்கும்
            மறுகன்னத்தில் அறையும்
            வாய்ப்பே இல்லாமல்
            அந்தக்கணமே
            அறுத்தெறியப்படும்

            வெட்டப்படுவது இனிமேல்
            நகங்களல்ல-
            விரல்கள்.
            உனது மகுடங்களை
            மூழ்கடிப்பதற்கே
            வேர்வைத்துளிகள்
            வெள்ளமாய் இணைகின்றன.

-இன்குலாப்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் திரு எம்ஜிஆர் சந்திப்பு.

"ஈழ விடுதலைப் போராளிகள் ஐந்து அமைப்புகளாக ஏன் பிளவுபட்டு நிற்க வேண்டும். ஒரே அணியில் ஒன்றுசேர முடியாதா?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

"ஒற்றுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஒரு உறுதியான, தெளிவான இலட்சியத்தின் அடிப்படையில்தான் போராளி அமைப்புகள் ஒன்றுசேர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிறையவுண்டு. நடத்தையிலும் வேறுபாடு உண்டு. விடுதலைப் புலிகள் தனித்துவமானவர்கள். தனித்துவப் பண்பியல்பு கொண்ட வர்கள். ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு போன்ற உயரிய பண்புகளை இறுக்கமாகப் பேணுபவர்கள்.சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகளும் இலட்சிய உறுதிப்பாடும் ஏனைய அமைப்பினரிடம் காணமுடியாது" என்று விளக்கினேன். மௌனமாக ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலி வீரர்கள் கடைப்பிடிக்கும் பண்பியல்புகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

உமா மகேஸ்வரனைப் பற்றிக் கேட்டார். "அவரும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராமே? தனது இயக்கம்
தான் உண்மையான புலி இயக்கம் என்று சொல்லித் திரிகிறாராம். பிரபாகரனுக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை?" என்று கேட்டார்.

"போராளி அமைப்புக்களைச் சேர்ந்த அனைவரையுமே ஈழத்துப் புலிகள் என்று தமிழ்நாட்டு மக்கள் அழைப்பது வழக்கமாகிவிட்டது. இந்தக் குழப்பத்தால் மற்றைய அமைப்புகள் புரியும் பாவம், பழி எல்லாமே புலிகள் இயக்கம் மீது விழுந்து விடுகிறது. உமா மகேஸ்வரனும் ஒரு காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தவர். இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளொட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார். புலிகளின் தலைமையை அழிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அவர் ஒரு கொடிய மனிதர், தமிழ் நாட்டிலுள்ள அவரது பயிற்சி முகாம்களில் கொடுமைகள் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. அவை வதை முகாம்களாக மாற்றப்பட்டிருக்கின்றனவாம். பல அப்பாவி இளைஞர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கிறது'' என்று கூறினேன்.

"அப்படியான பேர்வழியா? எனக்கு அவர் பற்றி விபரமாகத் தெரியாது. அவரை நாளை சந்திப்பதாக நேரம் ஒதுக்கியிருக்கிறேன். அதை இரத்துச் செய்ய வேண்டும். இப்படியான பேர்வழியுடன் எந்த உறவும் வைத்திருக்கக் கூடாது" என்றார்.

-தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம்.

Monday, 20 June 2022

பத்மநாபா. தோழர் பாலன்

பத்மநாபா !  

பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை. 

மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும். 

பத்மநாபா விடுதலையை விரும்பினார் பத்மநாபா புரட்சியை விரும்பினார் பத்மநாபா ஈழத்தை விரும்பினார் 

ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார். 

ஆனால், நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள் நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள் நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள் இன்று அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள். 

இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில் தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார். 

தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார் 

இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார். 

தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார். அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார். 

இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார். அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார். 

பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று 

ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. 

எனினும் பத்மநாபா தன் இறுதிக் காலத்தில் கூறிய ஒரு வரியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 “இந்தியாவை பயன்படுத்த நாம் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”என்று அவர் கூறினார். 

எனவே தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

தோழர் பாலன்

பூஜ்ஜியத்தை கண்டறிந்தது யார்? தேவன்

பூச்சியத்தைக் கண்டறிந்தது யார் ? 

பூச்சியத்தைக் கண்டுபிடித்தவர் ஆரியப்பட்டர் என வரலாறாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அது முழுப்பொய். இது ஓர் இட்டுக்கட்டப்பட்ட கதை.  ஆரியப்பட்டருக்கு முன்பே ஐந்திரம்  எனும் தமிழிலக்கண நூலில்  இன்று பூச்சியம் என அழைக்கப்படும் இலக்கம்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது "பாழ்" என்ற பெயரில் இருக்கிறது. ( பாழாய்ப்போச்சு, பாழாகிவிட்டது என்ற சொற்களின்  வினையடியே பாழ் என்பதிலிருந்து வந்ததுதான்) .

 “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளதனை வைத்து சிலபல (???) வந்தேறி ‘அறிஞர்களும்’, அவர்தம் அடிவருடிக் கிடக்கும் நம்மினக் கோடரிக் காம்புகளும் என்னவோ ஐந்திரம் என்பது தொல்காப்பியத்திற்கு மிகமிக முற்காலத்திலேயே வடிக்கப்பட்ட ‘சமற்கிருத’ இலக்கண நூல் என்றும், அதில் கற்றுத்  தேர்ந்தபின்னரே  தொல்காப்பியரால் தமிழிலக்கணம்  எழுத முடிந்தது என்றும் பிதற்றித்  திரிகின்றனர். இது ஆரியரின் முழு உருட்டு. 

உண்மையில் இந்த ஐந்திரம் என்பது யாது ?
 தொல்காப்பியத்திற்கு முந்துநூலாக  இருந்து, பின்னர் காலப்போக்கில் மறைந்துபோன ஒரு பண்டைத்தமிழ் இலக்கண நூல்.  உண்மையில் இந்திய மொழிகளுக்கு இலக்கணம் வகுக்க எடுத்துக்காட்டாக விளங்கியதும், பாணினி என்பவரால் எழுதப்பட்ட  வடமொழியிலக்கணத்திற்குக் காலத்தால் மிகவும் தொன்மையானதுமாகிய முந்துதமிழ்  இலக்கணப் பொது நூலே அதுவாகும். பாணினியைப் பின்பற்றி வந்தவரே ஆரியப்பட்டர். 

சரி, இந்த ‘ஐந்திரன்’ எனும் சொற்பிறப்பு பற்றி ஆராயுங்கால் என்ன தெரிகிறது?

‘ஐ’ என்பது மேன்மை, உயர்வு, அரசன் போன்றவற்றைக் குறிப்பதாகும். இந்த ஐ என்பதிலிருந்தே ஐயன்,  ஐந்தன், ஐந்திரன் எனும் சொற்களும் பிணைந்துள்ளன. ஐந்திரன் எனும் சொல்லிலிருந்தே ஐந்திரம் எனும் சொல்லும் பிறந்துள்ளது. இதனை, புலம் எனும் சொல் புலத்தன் என்றும், புலந்தன் என்றும், பின்னர் அஃதே புலந்திரன் என்றும் திரிந்தமையையும், மாந்தன் எனுஞ் சொல் மாந்தரன் என்று திரிந்துள்ளமையையும் ஒப்புநோக்கி அறியலாம்.

இப்படி ஐந்திரன் என்பானால் இயற்றப்பட்ட தமிழிலக்கண நூலே ஐந்திரம் எனப்பட்டது. 

 அதேபோல் பெண்பாற்பெயராக ஐந்தக்க, ஐந்தம்மா, ஐத்தை (இன்றைய அத்தை) என வழங்கிவருதளையும் ஒப்புநோக்கினால், அனைத்தும் விளங்கும். இந்த ஐந்தரம் எனுஞ் சொல், ஒருவகைப் பனைமரத்தைக் குறிக்கிறது. இச்சொல் யாழ்ப்பாண வழக்கில் உள்ளதாகும். தொல்காப்பியர் தமக்கு முன்பே படிக்கப்பட்ட ஐந்திரம் என்னும் தமிழிலக்கணத்தை நன்கு கற்றவராதலால், முந்துநூல் மரபினைப் பேணிக் காத்துள்ளார். தொன்நெடுங் களத்தில் முதுநாரை, முதுமுருகு, களரியாவிரை, இசைநுணுக்கம் போன்ற பல்வேறு இலக்கண நூல்களும், அகத்தியர் இயற்றியதாகக் கூறப்பட்ட அகத்தியம் எனும் இயற்றமிழ் இலக்கணமும் காலப்போக்கில் மறைந்துபோனது.

 இந்நிலையில், வரலாற்றுக்கெட்டியவரை ஐந்திரமே மிகத் தொன்மையான தமிழ் நூலாக நாவலந்தீவு நெடுக, அதாவது இன்றைய இந்தியா முழுக்க அறியப்பட்டுள்ளது. ஆரியர் இங்கே நுழையும் முன்னர், இன்றைய இந்தியப் பெருநிலம் முழுக்கத் தமிழே நிலவி வந்தமைக்கான சான்றுகளைப் பல்வேறு அறிஞர் பெருமானார் நிறுவியுள்ளனர்.
 புத்தர்கூடத் தமது இளமைக்காலத்தில் தமிழைக் கற்றுள்ளார் என்று லலிதவிசுத்தாரம் என்னும் நூல் கூறுகிறது. புத்தர் தமது பதினாறாம் அகவையில் ஐந்திரவிலக்கணம் கற்றுள்ளதாக புத்த சாதகக் கதைகள் கூறுகின்றன. இந்த ஐந்திரவிலக்கணத்தைக் கற்றுத்தேர்ந்த பல அறிஞர்கள் கி. மு. ஆறாம் நூற்றாண்டுவரை பரந்து  இருந்துள்ளனர். அதேவேளை, பாணினியின் காலத்தில்கூட கங்கைச் சமவெளிப்பகுதியில் ஐந்திரம் கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிபு.

தமிழர்கள் எண்கணிதத்தை பாழ்,  கால், அரை, ஒன்று என்றே ஆரம்பித்தார்கள். ஐந்திரம் என்ற நூலைக் கற்ற தொல்காப்பியர் அங்கிருந்தே பாழ் என்ற சொல்லை எடுத்து தொல்காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார்.

"பாழென் கிளவி மெல் லெழுத் துறழ்வே" (தொல்.387)

உண்மையில் ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலிலிருந்து எடுக்கப்பட்ட "பாழ்" என்ற சொல்லையே பாணினி என்ற ஆரியர் உபயோகிக்க,   அவரைத்தொடர்ந்த ஆரியப்பட்டர் பாழ் என்ற சொல்லை பூச்சியம் என்ற சொல்லாக மாற்றினார். 

ஆதலால் பாழ் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரால் உபயோகிக்கப்பட்ட இலக்க மற்றும் இலக்கணச் சொல்.  

நேற்று வந்த ஆரியப்பட்டரையும் பூச்சியத்தையும் இன்றுடன் கைவிடுக தமிழரே. 

-தேவன்